தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக வங்கி நடத்திய 2 பேர் கைது

Go down

உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக வங்கி நடத்திய 2 பேர் கைது Empty உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக வங்கி நடத்திய 2 பேர் கைது

Post  ishwarya Wed Mar 27, 2013 12:10 pm

புலந்த்ஷர், மார்ச் 26-

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷரில் சட்டவிரோதமாக வங்கி நடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி வைபவ் கிருஷ்ணா கூறியதாவது:-

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷரில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் ‘அல்-அமானத் பண்ட்’ என்ற பெயரில் சட்டவிரோதமாக வங்கி செயல்பட்டு வந்தது. முறைப்படி அனுமதி பெறாமல் இயங்கிய இந்த வங்கியில் 250 பேர் கணக்கு வைத்திருந்தனர். வட்டியில்லா வங்கி என்ற கொள்கையுடன் செயல்பட்டு வந்த இந்த வங்கியில் மொத்தம் 80 ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக வங்கியில் காசோலைக்கு பணம் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், ஆத்திரத்தில் வங்கி நடத்திய சாகிப், ரிஸ்வான் ஆகியோரை சிறைபிடித்த தங்கள் கிராமத்திற்கு கொண்டு சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், அங்கு சென்று வங்கி உரிமையாளர்கள் இருவரையும் மீட்டு கைது செய்தனர். அவர்களை கடத்திய நபர்களும் கைது செய்யப்பட்டனர். வங்கியின் செயல்பாடுகளால் ஏற்பட்ட பாதிப்பு பற்றி வாடிக்கையாளர்கள் ஒருவரும் புகார் அளிக்கவில்லை. இருப்பினும், காவல்துறை தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்து, கைது செய்யப்பட்டவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum