தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ்ப் படங்களுக்கு 5 தேசிய விருது

Go down

தமிழ்ப் படங்களுக்கு 5 தேசிய விருது Empty தமிழ்ப் படங்களுக்கு 5 தேசிய விருது

Post  ishwarya Tue Mar 26, 2013 5:23 pm



புது தில்லி, மார்ச் 7: 59-வது தேசிய திரைப்பட விருதுகள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன. "தி டர்ட்டி பிக்சர்' படத்தில் நடித்த வித்யா பாலன் சிறந்த நடிகையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மராத்தி மொழிப் படமான "தியூல்' படத்தில் நடித்த கிரீஷ் குல்கர்னி சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ் படங்களுக்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சற்குணம் இயக்கிய "வாகை சூடவா' சிறந்த தமிழ் பட விருதைப் பெற்றுள்ளது. சிறந்த பொழுதுபோக்குப் படத்துக்கான விருது சுசீந்திரன் இயக்கிய "அழகர்சாமியின் குதிரை' படத்துக்கு கிடைத்துள்ளது. அப்படத்தில் நடித்த அப்புகுட்டி சிறந்த துணை நடிகராகத் தேர்வாகியுள்ளார்.

ஆரண்ய காண்டத்தை இயக்கிய தியாகராஜன் சிறந்த அறிமுக இயக்குநர் விருதைப் பெற்றுள்ளார். இப்படத்துக்காக கே.எல்.பிரவீண் சிறந்த படத் தொகுப்பாளர் விருதைப் பெறுகிறார்.

"தி டர்ட்டி பிக்சர்' திரைப்படம் தென்னிந்திய நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. மிலன் லூத்ரியா இயக்கிய இந்தப் படத்தில் நாயகியாக வித்யா பாலன் நடித்துள்ளார். "ஒரு நடிகைகளின் வெற்றியையும், வீழ்ச்சியையும் விளக்கும் வகையில் துணிச்சலாகவும், இயல்பாகவும் வித்யா பாலன் நடித்துள்ளார்' என்று நடுவர் குழு தலைவர் ரோஹிணி ஹத்தங்கடி தெரிவித்தார்.

இரண்டு சிறந்த படங்கள்: சிறந்த திரைப்படத்துக்கான விருதை "தியூல்' மற்றும் "பியாரி' ஆகிய இரண்டு படங்களும் கூட்டாகப் பெறுகின்றன.

"அன்ஹே கோஹ்ரே தா தான்' என்ற பஞ்சாபி திரைப்படத்தை இயக்கிய குருவிந்தர் சிங் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை "அன்ஹே கோஹ்ரே தா தான்' படத்தின் ஒளிப்பதிவாளர் சத்ய ராய் நாக்பால் பெறுகிறார். "ரஞ்ஜனா அமி அர் அஷ்பு நா' என்ற வங்கப் படத்துக்கு இசையமைத்த நீல் தத் சிறந்த இசையமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதே படம் நடுவர்களின் சிறப்பு விருதையும் பெற்றுள்ளது.

சிறந்த பின்னணிப் பாடகர் ஆனந்த் பாடே. மராத்தி மொழியில் வெளியான "பாலகந்தர்வா' படத்தில் இடம்பெற்ற பாடலுக்காக இந்த விருதை அவர் பெறுகிறார். "அபோஷேஷே' என்ற வங்காளி மொழிப் படத்தில் பாடிய ரூபா கங்குலி சிறந்த பின்னணிப் பாடகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறந்த குழந்தைகள் பட விருது: "சில்லர் பார்ட்டி' சிறந்த குழந்தைகள் படமாக தேர்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திலும் "ஸ்டேன்லி கா தாபா' படத்திலும் நடித்த சிறுவர்களுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஷாருக் கான் நடித்த "ரா ஒன்' திரைப்படம் சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்டுக்கான விருதைப் பெறுகிறது. "ஸினோரீட்டா' என்ற பாடல் இடம்பெறும் "ஜிந்தகி நா மிலேங்கி தோபாரா' சிறந்த நாட்டிய அமைப்புக்கான விருதைப் பெறுகிறது.

சிறந்த ஆவணப்படத்துக்கான விருதை, பிரமோத் புர்ஸ்வாணே இயக்கிய "அன்ட் வி பிளே ஆன்' பெறுகிறது. ஆவணப்பட வரிசையில் மூன்று படங்கள் தலா இரண்டு விருதுகளைப் பெறுகின்றன.

"டைகர் டைனாஸ்டி' படத்துக்கு சிறந்த சுற்றுச்சூழல் மற்றும் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதுகளும், "தேர் இஸ் சம்திங் இன் த ஏர்' படத்துக்கு சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த எடிட்டிங்குக்கான விருதுகளும், "பஞ்சக்கி' படத்துக்கு சிறந்த இசை மற்றும் சிறந்த குறும்படத்துக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 2012-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு: 3 தமிழ்ப் படங்களுக்கு 5 விருதுகள்
» பால்கே விருது பெற்றார் பாலச்சந்தர்… தனுஷ், சரண்யா, சீனு ராமசாமிக்கு தேசிய விருது!
» ஆந்திராவிலும் தமிழ்ப் படங்களுக்கு நெருக்கடி ஆரம்பித்துவிட்டது
» பிரபுதேவாவுடன் காதல் முறிவு: புதிய தமிழ்ப் படங்களுக்கு கால்ஷீட் தரும் நயன்
» சுனைனாவுக்கு தேசிய விருது…?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum