தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘3–வது அணி, கானல் நீர்; ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை’’ முலாயம்சிங் கருத்தை காங்கிரஸ், பா.ஜனதா நிராகரித்தன

Go down

‘3–வது அணி, கானல் நீர்; ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை’’ முலாயம்சிங் கருத்தை காங்கிரஸ், பா.ஜனதா நிராகரித்தன  Empty ‘3–வது அணி, கானல் நீர்; ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை’’ முலாயம்சிங் கருத்தை காங்கிரஸ், பா.ஜனதா நிராகரித்தன

Post  meenu Tue Mar 26, 2013 4:57 pm

3–வது அணி ஆட்சி, கானல் நீர், அது ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை என்று காங்கிரசும், பா.ஜனதாவும் நிராகரித்தன.

முலாயம்சிங்

மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரித்து வரும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் நேற்று முன்தினம் 3–வது அணிக்கு அழைப்பு விடுத்தார்.காங்கிரஸ், பா.ஜனதா அல்லாத, ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று அவர் கூறினார்.இந்நிலையில், அவரது 3–வது அணி கருத்தை காங்கிரசும், பா.ஜனதாவும் நிராகரித்துள்ளன.

காங்கிரஸ்

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரஷித் ஆல்வி கூறியதாவது:–3–வது அணிக்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை. எப்போதெல்லாம் 3–வது அணி ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் அது விரைவிலேயே கவிழ்ந்து விடுவதைத்தான் வரலாறு சுட்டிக்காட்டுகிறது. மக்கள், 3–வது அணியை ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.பதவிக்காகவே 3–வது அணி ஆரம்பிக்கப்படுவதால், அதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

அத்வானிக்கு பாராட்டு

அத்வானியை முலாயம்சிங் புகழ்ந்தது பற்றி நாங்கள் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. அது அவரது தனிப்பட்ட கருத்து. அதை நாங்கள் ஏற்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை, பா.ஜனதா ஒரு மதவாத கட்சி. மதவாத சக்திகளை எப்போதும் எதிர்ப்போம்.பிரதமர் மன்மோகன்சிங்கை பலவீனமானவர் என்றும், முலாயம்சிங் சொல்லி இருக்கிறார். மன்மோகன்சிங், திறமையான பிரதமர். உலக அளவில் அங்கீகாரம் பெற்றவர். அவரை விமர்சிப்பது நாட்டையே விமர்சிப்பதற்கு சமம்.இவ்வாறு அவர் கூறினார்.

மணீஷ் திவாரி

மத்திய மந்திரி மணீஷ் திவாரி கூறியதாவது:–

கடந்த 20 ஆண்டுகால அரசியலை எடுத்து பார்த்தால், 3–வது அணி என்பது ஒரு கானல் நீர் என்பது தெரியும். மத்திய அரசு ஸ்திரமாகவே இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கூறியதாவது:–

முலாயம்சிங் சொன்னது ஒன்றும் புதியது அல்ல. காந்தி, நேரு கொள்கைகளின் அடிப்படையில் காங்கிரஸ் செயல்படுகிறது. எனவே, அவரது கருத்து பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா

பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் பல்பீர் புஞ்ச் கூறுகையில், ‘3–வது அணி என்பது செய்தியில் அடிபட்டுக்கொண்டிருக்கும். ஆனால் அது தொடங்கப்படாது. அப்படி ஒரு அணி வரும் என்று நான் கருதவில்லை’ என்றார்.ஐக்கிய ஜனதாதளம் மூத்த தலைவர் தேவேஷ் சந்திர தாக்குர் கூறுகையில், ‘3–வது அணிக்கு வாய்ப்புள்ளதாக நான் கருதவில்லை. கூட்டணி அரசுதான் அமையும். ஆனால், அது 3–வது அணி ஆட்சியாக இருக்காது’ என்றார்.அதே சமயத்தில், தேசியவாத காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி.பி.திரிவாதி, ‘வெவ்வேறு கட்சிகள், ஒரே செயல் திட்டத்துடன் ஆட்சி அமைப்பார்கள்’ என்று கூறினார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» காங்கிரஸ்–கர்நாடக ஜனதா இடையே மறைமுக ஒப்பந்தம் பா.ஜனதா குற்றச்சாட்டு
»  சி.பி.ஐ.யை பயன்படுத்தி எதிர்ப்பவர்களை ஜெயிலுக்கு அனுப்ப காங்கிரஸ் கட்சியால் முடியும் முலாயம்சிங் யாதவ் கடும் தாக்கு
» தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியி
»  ராகுபகவானின் ஆட்சிக்கு உட்பட்ட பொறுப்புகள்
» ராகுபகவானின் ஆட்சிக்கு உட்பட்ட பொறுப்புகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum