தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒப்பிலியப்பன் கோவில்

Go down

ஒப்பிலியப்பன் கோவில்  Empty ஒப்பிலியப்பன் கோவில்

Post  birundha Sun Mar 24, 2013 6:27 pm

கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோவில் உள்ளது. இத்திருத்தலத்தில் எம்பெருமானுக்கு உப்பு இல்லாமலே பிரசாதங்கள் செய்யப்படுகின்றன. கருடன் சந்நிதியின் அருகில் உள்ள இரண்டு திருவடிகளில் மிளகு கலந்த உப்பைச் சேர்ப்பது தொன்று தொட்டு நடந்து வருகிறது. அவ்வாறு செய்வதால் சரும் நோய் முதலியவை ஏற்படாது.

இங்குள்ள பெருமாளுக்கு துளசி இதழ்களால் அர்ச்சனை செய்து வழிபடுபவன் அசுவமேதவேள்வி செய்த பலனைப் பெறுவான். எம்பெருமானை நடந்து சென்று வழிபடுபவன் மிக்க புண்ணியத்தை அடைவான். பசுவின் குளம்படி நிலத்தை அளிப்பவன் மோட்சம் அடைவான்.

சந்தனம், குங்குமம், புஷ்பம், தூபக்கால், தீபக்கால், திருமஞ்சனம், பாத்ரம், வெண்கலமணி ஆடை இவற்றைச் சமர்பிப்பவன் பிரம்மஹத்திதோஷம், போன்ற பாவங்களிலிருந்து விடுபடுவான்.

எம்பெருமானின் உற்சவ தினமான புரட்டாசி அல்லது பங்குனி சிரவணத்தன்று காலையில் புஷ்கரணியில் நீராடி, தானங்களைச் செய்து, ஐந்து மறையோர்க்கு பாபஸ்ம் கொடுத்து வணங்குபவன் ஐம்பெரும் பாதங்கள் நீக்கப்பெற்று, இப்பூமியில் நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்வான்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum