தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அழகாபுத்தூர் காசுநாதர் கோவில்

Go down

அழகாபுத்தூர் காசுநாதர் கோவில் Empty அழகாபுத்தூர் காசுநாதர் கோவில்

Post  birundha Sun Mar 24, 2013 5:24 pm

ஸ்தல வரலாறு.....

சங்கு, சக்கரத்துடன் மகாவிஷ்ணுதான் அருள்பாலிப்பார். ஆனால், ஒரு கோவிலில் முருகப்பெருமான் அப்படிப்பட்ட திருக் கோலத்தில் காட்சி தருகிறார். ஒருசமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்க, தேவர்கள் தங்களை காக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினர். சிவன், அசுரர்களை அழிக்க முருகப்பெருமானை அனுப்பினார்.

அப்போது திருமால் முருகனுக்கு தனது சங்கு, சக்கரத்தை கொடுத்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகன், அசுரர்களை சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் கும்பகோணம் அருகிலுள்ள அழகாபுத்தூர் படிக் காசுநாதர் கோவிலில் உள்ள முருகன் கையில் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார்.

இந்திர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவரை, `கல்யாணசுந்தர சண்முக சுப்பிரமணியர்' என்று அழைக்கிறார்கள். இவருடன் வள்ளி, தெய்வானையும் அருள் பாலிக்கின்றனர். மகாலட்சுமிக்கும் தனி சன்னதி இருக்கிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum