தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சசிவர்ணேஸ்வரர் கோவில்

Go down

சசிவர்ணேஸ்வரர் கோவில் Empty சசிவர்ணேஸ்வரர் கோவில்

Post  birundha Sun Mar 24, 2013 5:20 pm

உங்கள் குழந்தை அடிக்கடி அழுகிறதா? அப்படியென்றால், நீங்கள் செல்ல வேண்டிய திருத்தலம் சிவகங்கையில் உள்ள பிரசித்திபெற்ற சசிவர்ணேஸ்வரர் கோவில். `சசி' என்றால் `சந்திரன்' என்று பொருள். ஒருமுறை சந்திரன் தனக்கு ஏற்பட்ட ஒரு தோஷத்திற்காக இத்தலத்தில் சிவபூஜை செய்து நிவர்த்தி பெற்றான்.

சந்திரனுக்கு அருள் புரிந்ததால் இங்குள்ள சிவபெருமானுக்கு `சசிவர்ணேஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. `சந்திரசேகரர்', `சோமசேகரர்' என்ற பெயர்களும் இவருக்கு உண்டு. பிறந்த குழந்தைகள் தொடர்ந்து அழுதாலும், அழாமல் இருந்தாலும் இங்குள்ள அம்பிகையிடம் வேண்டிக் கொள்கின்றனர். இதற்காக இங்கு வரும் பெற்றோர், அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் செய்கின்றனர்.

அர்ச்சகர்கள் அதையே பிரசாதமாகத் தருகிறார்கள். மேலும், அழும் குழந்தையை அம்பாள் சன்னதி முன்பு நிறுத்தி, அம்பிகையை வணங்கி கோவில் வளாகத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். பின், குழந்தை மீது அபிஷேக தீர்த்தத்தை ஊற்றி குளிப்பாட்டி விடுகிறார்கள். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். அம்பிகைக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தால், குழந்தையைக் குளிப்பாட்டுவதால் அதன் பிரச்சினை தீரும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum