தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உனக்கும் மேலே உள்ளவர் கோடி

Go down

உனக்கும் மேலே உள்ளவர் கோடி Empty உனக்கும் மேலே உள்ளவர் கோடி

Post  birundha Thu Jan 17, 2013 5:58 pm

* மனிதனின் மனம் இயற்கையாகவே தன்னைப் பற்றி உயர்வாகக் கருதும் இயல்புடையது. அதனால் அவன் தன் தீய தன்மைகளை மறைத்து விடுகிறான். கடவுளின் முன்னால் தன்னை புழுவுக்கும் கீழாக தாழ்த்திக் கொள்பவனே அவரது அன்புக்கு பாத்திரமாகிறான்.
* ""ஒன்றையும் வாதினாலாவது(வாதிடுதல்), வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் மேன்மையுள்ளவர்களாக எண்ணக் கடவீர்கள்,'' என்கிறது பைபிள்.
* தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு, "அவனை விட நான் சிறந்தவன்' என்று வாதம் செய்யக்கூடாது. அவனை விட நான் இன்னும் கீழ்நிலையிலேயே இருக்கிறேன் என நினைக்க வேண்டும்.
* ""கடவுளுடைய பிள்ளைகளான நல்லவர்கள் இரக்கத்தையும், தயவையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக் கொண்டு, ஒருவரையொருவர் தாங்கி, மன்னித்து நடக்கும்போது மெய்பக்தியின் வல்லமையையும் வசீகரத்தையும் விளக்கப்பண்ணுகிறார்கள்,'' என்ற வசனத்தை நினைவில் வையுங்கள்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum