தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் பிப்-7-ந் தேதி ரிலீஸ்: கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Go down

விஸ்வரூபம் பிப்-7-ந் தேதி ரிலீஸ்: கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு Empty விஸ்வரூபம் பிப்-7-ந் தேதி ரிலீஸ்: கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post  ishwarya Sat Mar 16, 2013 5:00 pm

கமலஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் படம் பிப்7-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இதுகுறித்து கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தடை பல கடந்து உங்கள் 'விஸ்வரூபம்' வரும் வியாழக்கிழமை 7ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.

நீதி சற்றே நின்று வந்தாலும் அன்றே ஆவனவெல்லாம் செய்து, எனக்கு உடன் உதவி செய்தமைக்கு தமிழக முதலமைச்சருக்கு நன்றி. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக, இந்திய மக்களுக்கும் என்னை தேடி வந்து ஆறுதல் சொன்ன தமிழ் திரையுலக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனக்குத் தெரியாமலே எனக்காக போராடிய அகில இந்திய திரையுலகிற்கும் நன்றி.

என் உரிமையைத் தமதெனக் கருதி பெரும் போர்க்குரல் எழுப்பிய செய்தி ஊடகங்கள் அனைத்திற்கும் ஒரு இந்தியனாக ஆழ்மனத்திலிருந்து நன்றி.

எதற்கும் கலங்காது புன்னகையுடன் இன்னல்களை ஏற்ற நான், ஒரு நிகழ்வினால் நெகிழ்ந்து, காதலாகி, கண்ணீர் மல்கி நிற்கின்றேன். என் தமிழக மக்கள் காசோலைகளையும், பணத்தையும் தபால் மூலம் அனுப்பி வைத்து கலங்காதீர், ‘யாமிருக்க பயமேன்’ என்ற அர்த்தத்தில் கடிதங்கள் இணைத்து அனுப்பி உள்ளனர். நெஞ்சு விம்மிக் கண்ணீர் காட்சியை மறைக்க என் மனது ‘இங்கிவரை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்’ என்று கேவிக் கேவி பாடியது.

என் கலையையும், அன்பையும் மக்கள் நலன் பயக்கும் சிறு தொண்டுகளையும் அன்றி வேறொன்றும் செய்வதறியேன்.

காசோலைகளையும், பணத்தையும் அன்புடன் திருப்பி அனுப்புகிறேன். உங்கள் விலாசங்கள் என் வசம். நாளை மதமும், அரசியலும் என்னை வரியவனாக்கினாலும், உண்பதற்கும், ஒதுங்குவதற்கும் அறிய பல விலாசங்கள் என் கைவசம் உள்ளது என்ற தைரியத்தில் இதை செய்கிறேன். நான் எங்கு சென்றாலும் எங்கு வாழ்ந்தாலும் என் நிரந்தர விலாசம் உங்கள் இனிய மனங்களே.

பொறுமை காத்த என் ரசிக நற்பணியாளர்களுக்கு பெரு வணக்கம். நற்பணி மன்றம் என்ற பெயர் காரணத்தை செயலாக்கிக்காட்டி ரௌத்திரம் பழகாமல், அகிம்சை பழகிய உங்கள் வீரம் சரித்திரத்தில் இடம்பெறும். வீரத்தின் உச்சக்கட்டம் அகிம்சை என்பதை எடுத்துக்காட்டிய என் ரசிக சகோதரர்களின் விஸ்வரூபத்தை வணங்கி, யாம் தயாரித்த விஸ்வரூபத்தை அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.

வாழிய செந்தமிழ் வாழ்க நற்தமிழர். வாழிய பாரத மணித்திரு நாடு.

இவ்வாறு கமலஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum