தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

க‌ள்ள‌க்காதலு‌க்காக கணவனை கொ‌ன்று புதைத்த மனை‌வி! (படம் இணைப்பு)

Go down

க‌ள்ள‌க்காதலு‌க்காக கணவனை கொ‌ன்று புதைத்த மனை‌வி! (படம் இணைப்பு) Empty க‌ள்ள‌க்காதலு‌க்காக கணவனை கொ‌ன்று புதைத்த மனை‌வி! (படம் இணைப்பு)

Post  meenu Wed Mar 13, 2013 2:42 pm

கள்ளத் தொடர்பை கண்டித்த கணவரை காதலனுட‌ன் சே‌ர்‌ந்து கொன்று செங்கல்சூளையில் உள்ள மணலில் புதைத்த பெண்ணை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே இ‌ந்த கோர ச‌ம்பவ‌ம் அர‌ங்கே‌றியு‌ள்ளது.

போச்சம்பள்ளி அருகே தாடிகாரன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த லிங்கண்ணன் (35) எ‌ன்பவ‌ர் செங்கல் சூளை நடத்தி வந்தார். இவரது மனைவி மாதம்மாள் (30). இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். ஒரு மகள், பர்கூர் அருகே ஜிஞ்சியம்பட்டியில் உள்ள மாதம்மாளின் தாயார் வீடான பாட்டி நிலா வீட்டில் வளர்ந்து வருகிறாள்.

இதனால் குழந்தையை பார்க்க அடிக்கடி ஜிஞ்சியம்பட்டிக்கு சென்று வந்த போது மாதம்மாளுக்கும், கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் சிவக்குமார் (35) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த லிங்கண்ணன் மனைவியை கண்டித்து‌ள்ளா‌ர்.

இதனால் ஆத்திரமடைந்த மாதம்மா‌ள், கள்ளக்காதலன் சிவக்குமாருட‌ன் சேர்ந்து லிங்கண்ணனை கொலை செய்து செங்கல்சூளையில் உள்ள மணலில் புதைத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து உறவினர்கள் போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் ரேகாவுடன் சென்று விசாரணை நடத்தினர். அப்போது மோப்பநாய் ரேகா, லிங்கண்ணன் வீட்டு அருகில் உள்ள செங்கல் சூளையில் தார்பாய் போட்டு மூடப்பட்டிருந்த மணல் குவியலை கிளறியது.

இதனால் அந்த மணல் குவியலை போலீசார் தோண்டி பார்த்தபோது அதில் லிங்கண்ணன் உடல் புதைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மாதம்மாளை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் தனதுகள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் லிங்கண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்து மணல் குவியலில் புதைத்து வைத்ததை ஒப்புக் கொண்டார்.

மேலும் கொலையை மறைக்க ரத்தக்கறை படிந்த துணிகளை எரித்ததாகவும், வீட்டை கழுவி சுத்தப்படுத்தியதாகவும், பின்னர் லிங்கண்ணன் சமீபத்தில் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சிவக்குமார் தப்பிச் சென்றதாகவும் கூறினார். தனிப்படை போலீசார் கிருஷ்ணகிரியில் பதுங்கியிருந்த சிவக்குமாரை கைது செய்தனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தை அழுகையை நிறுத்தவில்லை என சுடுநீரில் அவித்த கிராதகி! (படம் இணைப்பு)
» பக்கத்துவீட்டு குளியலறையில் ரகசிய கேமரா! எலெக்டிரிஷியன் கைது! (படம் இணைப்பு)
» ஊனமுற்ற மாணவனை கற்பளித்த பெண் ஆசிரியை (படம் இணைப்பு)
»  கணவனின் தம்பியை அடைவதற்காக கணவனையே போட்டுத்தள்ளிய மனைவி! (படம் இணைப்பு
» 18 வயது மாணவனுட‌ன் ஓடிய ‌திருமணமான நர்ஸ்! (படம் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum