தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்ற 15 வயது இளம்பெண்ணுக்கு 100 சவுக்கடி!

Go down

திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்ற 15 வயது இளம்பெண்ணுக்கு 100 சவுக்கடி! Empty திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்ற 15 வயது இளம்பெண்ணுக்கு 100 சவுக்கடி!

Post  meenu Wed Mar 13, 2013 2:34 pm

மாலத்தீவு நாட்டில் உள்ள வடபகுதி தீவுகளில் ஒன்றான பெய்தூவில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தை மர்மமான முறையில் புதைக்கப்பட்டிருந்தது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பொலிசார் குழந்தையை கொன்று புதைத்த 15 வயது இளம்பெண்ணை கைது செய்தனர்.

அவளிடம் நடத்திய விசாரணையில் வளர்ப்பு தந்தையுடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பில் பிறந்த குழந்தையை கொன்று புதைத்த குற்றத்தை ஒப்புக் கொண்டாள்.

அவள் மீது நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் திருமணத்திற்கு முந்தைய உறவில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவளுக்கு 100 சவுக்கடிகளை தண்டனையாக வழங்கி நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.

அந்த பெண்ணுக்கு தற்போது 17 வயது நடப்பதால் இன்னும் 8 மாதங்கள் வரை அவளை சீர்திருத்தப் பள்ளியில் வைத்திருந்து 18 வயது பூர்த்தியான பின்னர் சவுக்கடி தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum