தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதலர்களுடன் மும்பை சென்ற 4 மாணவிகள் பலாத்காரம்! கற்பழித்தது ரவுடிகளா? காதலர்களா?

Go down

காதலர்களுடன் மும்பை சென்ற 4 மாணவிகள் பலாத்காரம்! கற்பழித்தது ரவுடிகளா? காதலர்களா? Empty காதலர்களுடன் மும்பை சென்ற 4 மாணவிகள் பலாத்காரம்! கற்பழித்தது ரவுடிகளா? காதலர்களா?

Post  meenu Wed Mar 13, 2013 1:54 pm

நெல்லையைச் சேர்ந்த நான்கு மாணவிகள் மும்பையில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டுள்ள செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் நான்கு பேரும் 3 மாணவர்களுடன் மும்பை போயுள்ளனர். இந்த மூன்று பேரும் காதலர்கள் என்று கூறப்படுகிறது. தங்களை ரவுடிக் கும்பல் கற்பழித்ததாக மாணவிகள் கூறுவதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நான்கு மாணவிகளும் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ படித்து வருகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவிகள் நான்கு பேரும் தாங்கள் நெருக்கமாக பழகி வந்த 3 பேருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பின்னர் 7 பேரும் மும்பை போயுள்ளனர்.

அங்குதான் பலாத்காரம் நடந்துள்ளது. தங்களது மகள்களைக் காணவில்லை என்று நெல்லை போலீஸில் சம்பந்தப்பட்ட மாணவிகளின் குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். இதையடுத்து சிறப்புப் படை அமைக்கப்பட்டு விசாரணையும் தேடுதல் வேட்டையும் முடுக்கி விடப்பட்டது.

விசாரணையில் நான்கு மாணவிகளும் மும்பையில் சிக்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிறப்புப் படையினர் விரைந்து சென்று நால்வரையும் மீட்டனர். அந்த மாணவிகளுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் நால்வரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

7 பேரும் மும்பையில் தங்கியிருந்தபோது, அங்கு வந்த ஒரு ரவுடிக் கும்பல் மிரட்டி நான்கு மாணவிகளையும் கற்பழித்து விட்டதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிகளில் இருவர் தங்களது பெற்றோரைத் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறி கதறி அழுததைத் தொடர்ந்து இந்தச் செயல் அம்பலத்திற்கு வந்துள்ளது.

என்ன நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 4 மாணவிகளையும் கூட்டிச் சென்ற 3 மாணவர்கள் எங்கே என்பதும் தெரியவில்லை. போலீஸார் அவர்களைக் கைது செய்துள்ளனரா என்பதும் தெரியில்லை.

இப்படியா கெட்டுச் சீரழிவார்கள் இந்த வயதில்…?
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கொழும்பில் பிரபல தமிழ் பாடசாலை மாணவிகள் இருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய ஆசாமி கைது!
» காதலர்களுடன் வீடொன்றில் தங்கியிருந்த மாணவியர் இருவர் கைது!
» குறும்புக்கார மாணவிகள்
» கோவையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது: 39 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர்
» கோவையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது: 39 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum