தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உளவுப்பிரிவில் ஆட்கள் பற்றாக்குறை: பணியில் தொய்வு ஏற்படும் அபாயம்

Go down

உளவுப்பிரிவில் ஆட்கள் பற்றாக்குறை: பணியில் தொய்வு ஏற்படும் அபாயம் Empty உளவுப்பிரிவில் ஆட்கள் பற்றாக்குறை: பணியில் தொய்வு ஏற்படும் அபாயம்

Post  meenu Wed Mar 13, 2013 1:37 pm

புதுடில்லி: உளவுப்பிரிவில் திறமையான அதிகாரிகள் கிடைக்கப்பெறாததால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குறிப்பிடத்தக்க பணிகளில் தொய்வு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

திறமை பற்றாக்குறை :உள்நாட்டின் பாதுகாப்பு மற்றும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை முன்கூட்டியே அறிவித்தல் போன்ற பணிகளை உளவுப்பிரிவு செய்து வருகிறது. அதிமுக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில் நாடு முழுவதும் சுமார 26 ஆயிரத்து 867 பணியிடங்கள் உள்ளன. இவற்றில் தற்போது 18 ஆயிரத்து 795 பணியடங்களில் மட்டுமே அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் காலியாக உள்ள சுமார் 8 ஆயிரத்து 72 பணியிடங்களுக்கு அதாவது 30 சதவீதம் அளவிற்கு காலியிடம் உள்ளது எனவும். காலி பணியிடத்தை நிரப்புவதற்கு திறமையான ஆட்கள் பற்றாக்குறையும் ஒரு காரணம் என மத்திய உள்துறை இணைஅமைச்சர் ஆர்.பி.என்.சிங் லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: கடந்த 2001-2006-ம் ஆண்டு கால இடைவெளியில் இத்துறைக்கு நேரடியாக ஆட்களை தேர்வு செய்வது மற்றும் அந்தந்த அமைச்சரவை வாயிலாக ஆட்களை தேர்வு செய்வதும் தடை செய்யப்பட்டிருந்தது. இந்ததடை 2009-ம் ஆண்டு வரையில் நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் 2006-07-ம் ஆண்டில் சுமார் 6 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்காக அரசு ஒப்புதல் வழங்கியது. இதனைதொடர்ந்து கடந்த 2012-ம் ஆண்டு மத்திய அரசு உளவுத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் ஆட்களை தேர்வு செய்யும் பணியை நேரடியாக நடத்தப்பட்டது. தொடர்ந்து பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட போதிலும் பணியில் சேர ஆர்வம் காட்ட வில்லை என தெரிவித்தார்.

ஆள்மாறாட்டம் : கடந்த ஆண்டில் மட்டும் இப்பணியில் சேருவதற்காக ஆள்மாறாட்டம் செய்திருப்பதை அடுத்து விண்ணப்பதாரர்கள் மீது அப்பகுதி காவல் நிலையத்தில்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஆட்களை தேர்வு செய்வதில் வெளிப்படையான மற்றும் நேர்மையான முறையில் நடைபெறுவதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவாதக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அறுவடை பணி ஆட்கள் பற்றாக்குறை: நாமே உருவாகிய ஒரு பிரச்னை
» புத்துணர்ச்சி தரும் சக்தி பானங்களால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்:
» தூக்க மாத்திரை பாவிப்பவர்களுக்கு கேன்சர் ஏற்படும் அபாயம் - ஆய்வில் தகவல்.
» இலங்கையில் அல்கைதா இயக்கத்திற்கு ஆட்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்! - அமெரிக்கா
» வன்னியில் ஆசிரியர்களுக்கு கடும் பற்றாக்குறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum