தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

3-வது டெஸ்ட்: வாட்சன் உள்ளிட்ட 4 வீரர்கள் நீக்கம்

Go down

3-வது டெஸ்ட்: வாட்சன் உள்ளிட்ட 4 வீரர்கள் நீக்கம் Empty 3-வது டெஸ்ட்: வாட்சன் உள்ளிட்ட 4 வீரர்கள் நீக்கம்

Post  meenu Tue Mar 12, 2013 12:54 pm



இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலியாவின் துணைக் கேப்டன் வாட்சன், பட்டின்சன் உள்ளிட்ட 4 வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அணியிலிருந்து இவர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி கடும் விமர்சனத்துக்குள்ளான ஆஸ்திரேலியாவுக்கு இப்போது மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

நீக்கப்பட்டதன் பின்னணி: ஹைதராபாதில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தது. முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வியுற்றிருந்தது. இதனால், ஆஸ்திரேலிய ஊடகங்கள் கிளார்க் தலைமையிலான அணியை கடுமையாக சாடின. ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களை தாங்களே தற்கொலை செய்து கொண்டனர் என்றும் வர்ணித்திருந்தன.

இந்நிலையில், எதிர்வரும் போட்டிகளில் எப்படி மீள்வது, அதற்காக வீரர்கள் மற்றும் அணியை எப்படி முன்னேற்றுவது என்று வீரர்களிடம் அணி நிர்வாகம் கருத்து கேட்டிருந்தது. இதற்கு, இமெயில் மூலமோ அல்லது நேரிலோ 5 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

ஆனால், இதற்கு வாட்சன், உஸ்மான் க்வாஜா, வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் பட்டின்சன் மற்றும் மிச்சல் ஜான்சன் உள்ளிட்ட நான்கு வீரர்களும் பதில் அளிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து இவர்கள் நான்கு பேர் மீது அணி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. மொஹாலியில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியில் இவர்கள் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத் தகவலை மொஹாலியில் நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் அறிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "குறிப்பிட்ட காலத்துக்குள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கத் தவறியதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். சிறந்தது என்று கருதப்படும் ஓர் அணியில் வீரர்களின் நடத்தையும் சிறந்ததாக இருக்க வேண்டும் என்றார்.

முதல்முறை: தங்களின் கருத்துகளை அளிக்கத் தவறியதால் அணியிலிருந்து வீரர்கள் நீக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

நான்கு வீரர்கள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியின் கைவசம் 13 வீரர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் இருந்துதான் 3-வது டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவன் அணியைத் தேர்வு செய்ய முடியும். இது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

பந்து வீச்சில் பலவீனம்: நீக்கப்பட்ட நான்கு வீரர்களில் வேகப்பந்து வீச்சாளர் பட்டின்சன் மற்றும் ஜான்சன் ஆகியோரும் அடங்குவர். இதனால், ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுத்துறையில் ஓர் வெற்றிடம் உருவாகியுள்ளது. இந்த இடத்தை நிரப்புவது கடினம். முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்திய பட்டின்சன் இல்லாததே அதற்குக் காரணம். மொஹாலி மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றதாகும். இதில் பட்டின்சன் இல்லாதது, நிச்சயமாக ஆட்டத்தின் முடிவைப் பாதிக்கும்.

ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்தின் இந்த முடிவை முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக், சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே உள்ளிட்ட வீரர்கள் விமர்சித்துள்ளனர்.

வேடுக்குப் பதில் ஹேடின்: காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், 3-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. அவருக்குப் பதிலாக பிராட் ஹேடின் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள அவரை, இந்தியாவுக்கு வருமாறு அணி நிர்வாகம் பணித்தது. அணி வீரர்களுடன் அவர் திங்கள்கிழமை இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு திரும்பினார் வாட்சன்: 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பினார் அந்த அணியின் துணைக் கேப்டன் வாட்சன். அணியிலிருந்து 4 வீரர்கள் நீக்கப்பட்டது வீரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணியிலிருந்து நீக்கப்பட்ட செய்தி அறிந்தவுடன் தாய் நாட்டுக்குத் திரும்பினார் வாட்சன். அணி நிர்வாகத்தின் மீதிருந்த அதிருப்தி காரணமாகத்தான் அவர் நாடு திரும்பியுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் இது குறித்து ஆஸ்திரேலிய நிர்வாகம் வேறு விதமாக கருத்து தெரிவித்துள்ளது. "தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாகத்தான் அவர் நாடு திரும்பினார். இதனையும், அணியிலிருந்து நீக்கப்பட்டதையும் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடாது' என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அணி விவரம்: மைக்கேல் கிளார்க் (கேப்டன்), டேவிட் வார்னர், எட் கோவன், பிலிப் கியூஸ், மோய்சஸ் ஹென்ரிக்ஸ், கிளன் மேக்ஸ்வெல், ஸ்டீவன் ஸ்மித், பீட்டர் சிடில், மிச்சல் ஸ்டார்க், சேவியர் டோர்ட்டி, நாதன் லியான் மற்றும் பிராட் ஹேடின்.



3-வது போட்டியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து வாட்சன் கூறுகையில், "3-வது டெஸ்டிலிருந்து நீக்கப்பட்டதால், நிலைகுலைந்து போனேன். இந்த நிலையில், எதிர்காலத்தில் நடக்கவுள்ள டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. கிரிக்கெட் விளையாட்டை நான் அனுபவித்து விளையாடினேன். ஆனால், இப்போது எனது குடும்பத்தினருடன் சில வாரம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன்' என்று தெரிவித்தார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum