தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காஞ்சிபுரத்தில் அமர்நாத் பனிலிங்க தரிசனம்!

Go down

காஞ்சிபுரத்தில் அமர்நாத் பனிலிங்க தரிசனம்! Empty காஞ்சிபுரத்தில் அமர்நாத் பனிலிங்க தரிசனம்!

Post  meenu Tue Mar 12, 2013 12:52 pm



காஞ்சிபுரத்தில், பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான நிலையம் சார்பில், மஹாசிவராத்திரியை முன்னிட்டு பக்தர்களின் தரிசனத்துக்காக அமர்நாத் பனிலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை முதல் ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் பனிலிங்கத்தை தரிசித்துச் செல்கின்றனர்.

பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் இயக்கம் சார்பில், காஞ்சிபுரத்தில் மஹா சிவராத்திரியின்போது, கடந்த ஆண்டு அமர்நாத் பனிலிங்க தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு காஞ்சிபுரம் மக்களிடையே பலத்த வரவேற்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த ஆண்டும் கைலாய மானசரோவர் மற்றும் அமர்நாத் பனிலிங்க தரிசனத்துக்கும் சிறப்பு ஏற்பாடுகளை பிரம்மாகுமாரிகள் இயக்கம் செய்துள்ளது.

கைலாய மானசரோவர் தரிசனக் காட்சி காஞ்சிபுரம் ஆழ்வார் பங்களா திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தினமும் மாலை 4 மணி முதல் இங்கு சுவாமி தரிசனம் செய்யலாம்.

அமர்நாத் பனிலிங்க தரிசனம்: இதேபோல், காஞ்சிபுரம் ஏ.கே.எஸ். ராணி மஹாலில் அமர்நாத் பனிலிங்கம் தரிசனக்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. மாலை 4 மணி முதல் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை சிவராத்திரி அன்று இரவு முழுவதும் இவ்விரு தரிசனத்துக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை காஞ்சிபுரம் பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் பொறுப்பு பி.கு. அகிலா செய்துள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum