தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

துறையூர் அருகே பச்சமலை மழைவாழ் மக்களுக்கு அரசின் விலையில்லா பொருட்கள்: இந்திராகாந்தி எம்.எல்.ஏ வழங்கினார்

Go down

துறையூர் அருகே பச்சமலை மழைவாழ் மக்களுக்கு அரசின் விலையில்லா பொருட்கள்: இந்திராகாந்தி எம்.எல்.ஏ வழங்கினார் Empty துறையூர் அருகே பச்சமலை மழைவாழ் மக்களுக்கு அரசின் விலையில்லா பொருட்கள்: இந்திராகாந்தி எம்.எல்.ஏ வழங்கினார்

Post  meenu Tue Mar 12, 2013 12:34 pm

துறையூரை அடுத்த பச்சமலையில் உள்ள தென்புறநாடு ஊராட்சி டாப் செங்காட்டுப்பட்டியில் தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தென்புற நாடு ஊராட்சி தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.

உப்பிலியபுரம் ஒன்றிய குழு தலைவர் லலிதா செல்லமுத்து, ஒன்றிய செயலாளர் அழகாபுரி செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் ஆனந்திகணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலந்து கொண்டவர்களை துறையூர் தாசில்தார் உஷா வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திராகாந்தி எம்.எல்.ஏ தென்புற நாடு ஊராட்சியில் உள்ள டாப் செங்காட்டுப்பட்டி, நச்சிலிப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள பயனாளிகள் 967 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிரி ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழாவில் பேரூர் கழக செயலாளர்கள் உப்பிலியபுரம் ராஜாங்கம், பா.மேட்டூர் ராஜேந்திரன், பேரூராட்சி தலைவர் மைவிழி அன்பரசன், துறையூர் முன்னாள் நகர செயலாளர் செல்வம், செக்கர் ஜெயராமன், வழக்கறிஞர் அத்தியப்பன், ஆர்.ஐகள் வீரப்பன், ஆனந்தன், செல்வகணேஷ், விக்னேஷ், வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், மணிவண்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வி, தேவராஜன், தியாகராஜன், தினகரன், அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் ராமு நன்றி கூறினார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» துறையூர் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் குறைவாக கூலி கொடுத்ததால் மறியல்
» மத்திய அரசின் மென்மையான போக்கே சீன ராணுவ ஊடுருவலுக்கு காரணம் என்று பாரதீய ஜனதா கட்சி துணைத்தலைவர் உமாபாரதி குற்றம்சாட்டினார். மத்திய பிரதேச மாநிலம் பிந்த் என்ற இடத்தில் உமாபாரதி நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசின் மென்மையான அணுகுமுறையினால் தான் பாக
»  செக் மோசடி வழக்கு: துறையூர் கோர்ட்டில் பவர் ஸ்டார் ஆஜர்
» சமீரா ரெட்டி: தமிழ்நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி
» பாலாவுக்கு தேசிய விருது – பிரதீபா வழங்கினார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum