தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இது புளிச்சேரி மார்த்தாண்டம் ஸ்பெஷல்

Go down

இது புளிச்சேரி மார்த்தாண்டம் ஸ்பெஷல் Empty இது புளிச்சேரி மார்த்தாண்டம் ஸ்பெஷல்

Post  meenu Wed Mar 06, 2013 1:07 pm


புளிச்சேரி, எரிச்சேரி, காளன்,ஓளன்... & இதெல்லாம் பாலக்காட்டு ஸ்பெஷல் மெனுக்கள்.நம்மூரில் சாம்பார், காரக்குழம்பு,ரசம் போல... கேரளாவில் எரிச்சேரி,
புளிச்சேரி வகையறாக்கள். குண்டு குண்டான அரிசி சாதம், தேங்காய்ப்பூ, தயிர், வரமிளகாய் தாளிச்சம் என கேரளவாசிகளின் உணவுக்கலாசாரம் தனித்துவமானது.

நெடுங¢காலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு
இணைந்திருந்ததால் இரட்டை கலாசார வாழ்வியல்
நிலை ªக£ண்டகுமரி மாவட்டத்தில்,கேரள உணவு அயிட்டங்கள் சாதாரணமாகக் கிடைக்கின்றன.

அதிலும், நாகர்கோவில்& திருவனந்தபுரம் பிரதான சாலையில் இருக்கும் மார்த்தாண்டம் நகரிலுள்ள பல உணவகங்களில் பாலக்காட்டுத் தரத்திலேயே இந்த
உணவுகளை ருசிக்க முடிகிறது.

பாலக்காட்டு மெனுவில் பல சிறப்புணவுகள் இருந்தாலும் நம்மூர் மோர்க்குழம்பை ஒத்த புளிச்சேரி நாவைச் சுண்டி இழுக்கிறது.தயிரில் தோய்ந்த அன்னாசி
வாசனை பசியைத் தூண்ட, செஞ்சிவப்பான வரமிளகாய் மிதக்கும் இந்த புளிச்சேரியை ருசிப்பதற்கென்றே மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள
சித்ரா ஹோட்டலுக்கு பல வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்.

25வருட பாரம்பரியம் இந்த ஹோட்டலுக்கு உண்டு. உரிமையாளர் நாராயணன், நாங்குனேரிக்காரர்.
என்றாலும், எல்லா உணவுகளிலும் அப் படி«யப£லக்க£ட்டு கைமணம்.நன்கு பழுத்து மணம் பரப்பும் அன்னாசிப் பழத்தை இரண்டாக நெடுங¢காலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இணைந்திருந்த
குமரி மாவட்டத்தில்,கேரள உணவு அயிட்டங்கள்
சாதாரணமாகக் கிடைக்வகுந்து, நடுக்கட்டையை
வீசிவிட்டு சதைப் பகுதியை சிறு, சிறு துண்டுகளாக
வெட்டுகிறார்கள். தடியங்காயை சின்னச்சின்ன பீஸாக நறுக்கி வேக வைக்கிறார்கள் வெண் பூசணியைத்தான் குமரி மக்கள் தடியங்காய் என்கிறார்கள். சட்டியில் வரமிளகாய் உள்ளிட்ட தாளிப்பு அயிட்டங்கள்.

அதனுடன் தூக்கலாக அரைத்த இஞ்சி & பூண்டு விழுதைப் போட்டு, லேசாக வதங்கி வாசம் வரும் பதத்தில் புளிக்காத கெட்டித் தயிரை ஊற்றி, அன்னாசி, தடியங்காய் துண்டுகளைக் கொட்டி, மஞ்சள் தூள், உப்பு போட்டு ஒரே கொதியில் இறக்கி விடுகிறார்கள்.

இதுதான் புளிச்சேரி. சுடச்சுட ஊற்றி சாப்பிட்டால் நம்மையறியாமல் இன்னொரு கரண்டி சாதம் உள்ளே இறங்கி விடுகிறது. தயிர் புளிப்பு, அன்னாசி இனிப்பு, வர
மிளகாய் உறைப்பு என முச்சுவையும் கலந்து புதுவிதமான சுவையே இதன் ஸ்பெஷல்.

வெண்பூசணி, அன்னாசிக்குப் பதில் வெண்டைக்காய், மாங்காய் கலந்தும் புளிச்சேரி செய்கிறார்கள். இதுவும் ரசிக்கத் தகுந்த சுவைதான்.சேனை, கேரட், உருளை உள்ளிட்ட கலவையான காய்கறிகளை தேங்காய்பாலில் அவித்து செய்யப்படுகிற ஓளன், நன்கு காய்ந்த வற்றல்குழம்பு போல சுவைக்கிற எரிச்சேரியோடு பாலக் காட்டுக்கே உரித்தான இந்த
புளிச் « ச ரி யையும் « ச ர் த் து சுவைத்தால் வயிறே நம்மைக் கூப்பிட்டு வாழ்த்தும். அவ்வளவு இதம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum