கேரட்& தேங்காய் குடலை இட்லி
Page 1 of 1
கேரட்& தேங்காய் குடலை இட்லி
புழுங்கலரிசி & 2 கப், உளுந்து & 1 கப், உப்பு & தேவைக்கேற்ப, பெருங்காயம் & கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் & அரை கப், கேரட் துருவல் & அரை கப், மிளகு, சீரகம் (கரகரப்பாக உடைத்தது) & தலா 1 டீஸ்பூன், உடைத்த முந்திரி & 1 டேபிள் ஸ்பூன், நெய் & 2 டேபிள் ஸ்பூன்.
அரிசியை சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்தை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.அரிசியை இட்லி பதத்துக்கு ரவை மாதிரி அரைக்கவும். பாதி உளுந்தை கொரகொரப்பாகவும், மீதியை மையாகவும் அரைக்கவும்.
பிறகு கலந்து 8 மணி நேரம் புளிக்க விடவும். நெய்யைக் காய வைத்து முந்திரி, பெருங்காயம், மிளகு, சீரகம், கேரட் துருவல், தேங்காய் சேர்த்து வதக்கி, ஆறியதும் மாவில் கொட்டிக் கலக்கவும்.
உப்பு சேர்த்து, மீதி நெய்யும் சேர்த்துக் கலக்கவும். நெய் தடவிய தட்டில் அல்லது டம்ளரில் அல்லது கிண்ணத்தில் முக்கால் பாகம் வரை ஊற்றி, ஆவியில் 20 நிமிடங்கள் வேக வைக்கவும். ஆறியதும் தட்டினால் வந்து விழும். மிளகாய் பொடி அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
அரிசியை சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்தை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.அரிசியை இட்லி பதத்துக்கு ரவை மாதிரி அரைக்கவும். பாதி உளுந்தை கொரகொரப்பாகவும், மீதியை மையாகவும் அரைக்கவும்.
பிறகு கலந்து 8 மணி நேரம் புளிக்க விடவும். நெய்யைக் காய வைத்து முந்திரி, பெருங்காயம், மிளகு, சீரகம், கேரட் துருவல், தேங்காய் சேர்த்து வதக்கி, ஆறியதும் மாவில் கொட்டிக் கலக்கவும்.
உப்பு சேர்த்து, மீதி நெய்யும் சேர்த்துக் கலக்கவும். நெய் தடவிய தட்டில் அல்லது டம்ளரில் அல்லது கிண்ணத்தில் முக்கால் பாகம் வரை ஊற்றி, ஆவியில் 20 நிமிடங்கள் வேக வைக்கவும். ஆறியதும் தட்டினால் வந்து விழும். மிளகாய் பொடி அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum