தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீர்தோசை இது கார்காளா ஸ்பெஷல்

Go down

நீர்தோசை இது கார்காளா ஸ்பெஷல் Empty நீர்தோசை இது கார்காளா ஸ்பெஷல்

Post  meenu Wed Mar 06, 2013 12:55 pm


தமிழகத்தில் குமரி எப்படியோ, அதைப் போலவே கர்நாடகத்தில் கார்காளா. கேரளத்தை ஒட்டியிருப்பதால் உடை, உணவு, பண்டிகைகள் என அனைத்திலும் கேரளத்தின் சாயல்.நிலமெங்கும் தென்னை மரங்கள் தோகை விரித்து நிற்பதால், தேங்காய்தான் கேரள உணவுகளின் அடிப்படை. கார்காளா உணவுகளிலும் அது வெளிப்படுகிறது. எவ்வளவோ மாடர்ன் உணவுகள் ஊடுருவி விட்ட இந்தக் காலத்திலும், இந்நகரத்தில் உள்ள ஒவ்வொரு உணவகத்திலும் பழமையான மரபுணவுகள் கிடைக்கின்றன. அதில் ஒன்று தான் நீர்தோசை.தேங்காய்ப்பால் வாசனை வருட,வெண்மை நிறத்தில் தோசைக்குரிய வடிவ வரம்பை கட்டுடைத்து, சதுரவடிவில் இருக்கும் இந்த நீர்தோசை விருப்பத்துக்குரிய சுவை கொண்டது. காலை, மாலை
வேளைகளில் கார்காளாவின் எல்லா உணவகங்களிலும் இத்தோசை மணக்கிறது.
பச்சரிசியும், தேங்காய்ப்பாலும்தான் இதன் உள்ளடக்கம்.நகரத்துப் பிள்ளைகள் நாளை,‘அரிசி எந்த மாவில் செய்யப்படுகிறது’ என்று கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த அள
வுக்கு விவசாயம் நகரப்புற வாழ்க்கையில் இருந்து அந்நியப்பட்டு நிற்கிறது. எதார்த்தம் என்ன
வென்றால், ஆசியாவில் 200 கோடிக்கும் மேலான மக்களுக்கு அரிசிதான் அடிப்படை உணவு.
உலகில் மூவரில் ஒருவர் அரிசி தான் சாப்பிடுகிறார்.அரிசி எப்படிப் பிறந்தது என்பது பற்றி உலகெங்கும் பல கதைகள் உண்டு. தெரஷி&ஓமி&காமி என்ற சூரிய தேவதை தான் அரிசியை உலகுக்குத் தந்தாள் என்று ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். விஷ்μ,பூலோகத்தில் நெல் பயிரிடும் முறையை பயிற்றுவிக்க இந்திரனை அனுப்பியதாக தாய்லாந்தில் ஒரு கதை உண்டு. முதலில் காட்டுத்தாவரமாகத் தோன்றி, பல கோடி வருடங்களுக்குப் பிறகு மழையாலும், காற்றாலும் உலகின் பல பகுதிகளுக்குப் பரவியே நெல் நாட்டுத் தாவரமாகியது என்று நம்புகிறது விஞ்ஞானம். நம் வாழ்க்கையோடு மட்டுமின்றி, ரத்தத்தோடும் கலந்த உணவுப்பொருள் அரிசி.நீர்தோசைக்கு 1 கிலோ தரமான பச்சரிசி, 1 லிட்டர் தேங்காய்ப்பால் தேவை. அரிசியை தேங்காய்ப்பாலிலேயே ஊறவைக்கலாம். நன்கு ஊறியபிறகு இரண்டையும் சேர்த்து அரைத்து, தண்ணீர் பதத்துக்குக் கரைத்துவிட வேண்டும். மேலிருந்து ஊற்றினால் தெறித்து ஓடவேண்டும். நீராகக் கரைத்து சிறிது நேரம் வைத்திருந்து தோசை வார்த்துவிட வேண்டும். நீண்டநேரம் வைத்திருந்தால் புளித்து சுவை மாறிவிடும்.நீர்தோசையின் உண்மையான ருசி, சாப்பிடுவதில் மட்டுமில்லை; வார்ப்பதை பார்ப்பதிலும் இருக்கிறது. கிண்ணத்தில் மாவை எடுத்து, டீயை ஆற்றுவது போல கல்லில் ‘சர்’ரென்று ஊற்றுகிறார்கள். மாவுகல்லில் இலக்கின்றி பரவிய அடுத்த நொடி, கரண்டியை வைத்து ஓரத்தை சரி செய்து சதுரமாக்கி
லேசாக எண்ணெய்விட்டு, திருப்பிப் போட்டு எடுத்து விடுகிறார்கள்.இந்த தோசைக்கு சைடு டிஷ்ஷாக சில உணவகங்களில் சுள்ளென்று உறைக்கும் கார சட்னியும், பழக் கலவையும் தருகிறார்கள். சூடு ஆறும் முன்பாக சாப்பிட்டால் நீர் தோசைக்கு நீர் அடிமையாகி விடுவீர்.& வெ.நீலகண்டன் படங்கள்: ரா.புருஷோத்தமன்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum