அனுராக் காஷ்யபின் கும்பமேளாவும், இன்பமேளாவும்
Page 1 of 1
அனுராக் காஷ்யபின் கும்பமேளாவும், இன்பமேளாவும்
12 வருடங்களுக்கொருமுறை உத்திரபிரதேசம் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் மகா கும்பமேளா உலகப் பிரசித்திப் பெற்றது. இந்த பூமியில் நடக்கும் மிகப்பெரிய திருவிழாவாக இதனை அடையாளப்படுத்துகிறார்கள். இந்த மாபெரும் கும்பமேளாவை தனது படத்துக்காக கேமராவில் படம்பிடிக்கும் வேலையில் இருக்கிறார்அனுராக் காஷ்யப்.
சினிமாவின் 100 வது வருடத்தை கொண்டாடும் விதமாக பாம்பே டாக்கீஸ் என்றொரு படம் தயாராவது தெரிந்திருக்கும் அனுராக் காஷ்யப், கரண் ஜோஹர், சோயா அக்தர், திபேகர் பானர்ஜி ஆகியோர் ஆளுக்கு தலா ஒரு குறும்படத்தை இயக்கி அதனை மொத்தமாக பாம்பே டாக்கீஸ் என்ற பெயரில் வெளியிடுகிறார்கள். அதற்காக எடுக்கப்படும் படத்திற்காகதான் இந்த கும்பமேளாவை படம் பிடிக்கிறார் அனுராக். இனி இன்பமேளா.
அனுராக் தமிழ் சினிமா மீது குறிப்பாக பாலாவின் படங்கள் மீது தீராத காதல் கொண்டவர். அவருக்கு பரதேசியை திரையிட்டு காண்பித்தார் பாலா. படத்தைப் பார்த்து ஆடிப்போனவர் தமிழகத்தில் மட்டும் இந்த அற்புதப் படம் தங்கிப் போகக் கூடாது என்ற நோக்கத்தில் தனது சொந்தப்பட நிறுவனம் மூலமாக பரதேசியை வடக்கே வெளியிடுகிறார். அந்த பிரஸ் ரிலீஸ் கீழே. . .
FILE
முன்னணி இயக்குனரான பாலாவின் 'பரதேசி' திரைப்படம் தமிழில் வெளியாவதோடு வட இந்தியாவிலும் வெளியாக உள்ளது. பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் பரதேசி படத்தை தனது நிறுவனம் மூலம் வட இந்தியாவில் வெளியிடுகிறார்.
சேது படத்தின் மூலம் அறிமுகமான பாலா, 'நந்தா', 'பிதாமகன்', 'நான் கடவுள்', 'அவன் இவன்' படங்களின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார். புதுயுக இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் பாலா அகில இந்திய அளவில் பாராட்டப்படுபவர்.
இவரது இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய படமான பரதேசி தேயிலை தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் அதர்வா, தன்ஷிகா, வேதிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை தொழிலாளர்கள் சந்தித்த இன்னல்களை இதில் பாலா தனக்கே உரிய கலைநயத்தோடு பதிவு செய்திருக்கிறார்.
விரைவில் இந்த படம் வெளியாகிறது. இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் இந்த படத்தால் கவரப்பட்டு இதனை வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் வெளியிட உள்ளார். ஆங்கில மற்றும் இந்தி மொழி சப் டைடில்களோடு 'பரதேசி' படத்தை தனது பேன்டம் பிலிம்ஸ் லிட் மூலம் அவர் வெளியிடுகிறார்.
அனுராக் காஷ்யப் 'பிளேக் பிரைடே', 'தேவ் டி' உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர். அவரது சமீபத்திய படமாக 'கிங்ஸ் ஆப் வாஸ்யப்பூர்' அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான அனுராக் காஷ்யப் பாலாவின் 'பரதேசி' படத்தை வட இந்தியாவில் உள்ளவர்களும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக அதனை அங்கு வெளியிட முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் உண்மையான விஸ்வரூபமாக பாலாவின் பரதேசி இருக்கப் போகிறது என்பதை அனுராக்கின் இந்த முயற்சியும் பாராட்டும் சுட்டிக் காட்டுகிறது.
சினிமாவின் 100 வது வருடத்தை கொண்டாடும் விதமாக பாம்பே டாக்கீஸ் என்றொரு படம் தயாராவது தெரிந்திருக்கும் அனுராக் காஷ்யப், கரண் ஜோஹர், சோயா அக்தர், திபேகர் பானர்ஜி ஆகியோர் ஆளுக்கு தலா ஒரு குறும்படத்தை இயக்கி அதனை மொத்தமாக பாம்பே டாக்கீஸ் என்ற பெயரில் வெளியிடுகிறார்கள். அதற்காக எடுக்கப்படும் படத்திற்காகதான் இந்த கும்பமேளாவை படம் பிடிக்கிறார் அனுராக். இனி இன்பமேளா.
அனுராக் தமிழ் சினிமா மீது குறிப்பாக பாலாவின் படங்கள் மீது தீராத காதல் கொண்டவர். அவருக்கு பரதேசியை திரையிட்டு காண்பித்தார் பாலா. படத்தைப் பார்த்து ஆடிப்போனவர் தமிழகத்தில் மட்டும் இந்த அற்புதப் படம் தங்கிப் போகக் கூடாது என்ற நோக்கத்தில் தனது சொந்தப்பட நிறுவனம் மூலமாக பரதேசியை வடக்கே வெளியிடுகிறார். அந்த பிரஸ் ரிலீஸ் கீழே. . .
FILE
முன்னணி இயக்குனரான பாலாவின் 'பரதேசி' திரைப்படம் தமிழில் வெளியாவதோடு வட இந்தியாவிலும் வெளியாக உள்ளது. பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் பரதேசி படத்தை தனது நிறுவனம் மூலம் வட இந்தியாவில் வெளியிடுகிறார்.
சேது படத்தின் மூலம் அறிமுகமான பாலா, 'நந்தா', 'பிதாமகன்', 'நான் கடவுள்', 'அவன் இவன்' படங்களின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார். புதுயுக இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் பாலா அகில இந்திய அளவில் பாராட்டப்படுபவர்.
இவரது இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய படமான பரதேசி தேயிலை தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் அதர்வா, தன்ஷிகா, வேதிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை தொழிலாளர்கள் சந்தித்த இன்னல்களை இதில் பாலா தனக்கே உரிய கலைநயத்தோடு பதிவு செய்திருக்கிறார்.
விரைவில் இந்த படம் வெளியாகிறது. இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் இந்த படத்தால் கவரப்பட்டு இதனை வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் வெளியிட உள்ளார். ஆங்கில மற்றும் இந்தி மொழி சப் டைடில்களோடு 'பரதேசி' படத்தை தனது பேன்டம் பிலிம்ஸ் லிட் மூலம் அவர் வெளியிடுகிறார்.
அனுராக் காஷ்யப் 'பிளேக் பிரைடே', 'தேவ் டி' உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர். அவரது சமீபத்திய படமாக 'கிங்ஸ் ஆப் வாஸ்யப்பூர்' அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான அனுராக் காஷ்யப் பாலாவின் 'பரதேசி' படத்தை வட இந்தியாவில் உள்ளவர்களும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக அதனை அங்கு வெளியிட முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் உண்மையான விஸ்வரூபமாக பாலாவின் பரதேசி இருக்கப் போகிறது என்பதை அனுராக்கின் இந்த முயற்சியும் பாராட்டும் சுட்டிக் காட்டுகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பரதேசி - பரவசத்தில் அனுராக் காஷ்யப்
» பரதேசியை வெளியிடுகிறார் அனுராக் காஷ்யப்
» மீண்டும் அனுராக் காஷ்யப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்
» பரதேசி படம் என்னை தகர்த்தெறிந்துவிட்டது: அனுராக் காஷ்யப்
» வட இந்தியாவில் பாலாவின் 'பரதேசி'யை வெளியிடும் அனுராக் காஷ்யப்.
» பரதேசியை வெளியிடுகிறார் அனுராக் காஷ்யப்
» மீண்டும் அனுராக் காஷ்யப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்
» பரதேசி படம் என்னை தகர்த்தெறிந்துவிட்டது: அனுராக் காஷ்யப்
» வட இந்தியாவில் பாலாவின் 'பரதேசி'யை வெளியிடும் அனுராக் காஷ்யப்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum