தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முட்டை மசாலா ஆப்பம்

Go down

முட்டை மசாலா ஆப்பம்                Empty முட்டை மசாலா ஆப்பம்

Post  ishwarya Mon Feb 25, 2013 2:34 pm

முட்டை - 2
பச்சரிசி - கால் கிலோ
புழுங்கல் அரிசி - கால் கிலோ
உளுத்தம் பருப்பு - 4 தேக்கரண்டி
கல் உப்பு - 2 தேக்கரண்டி
சோடா உப்பு - 4 சிட்டிகை
பச்சைமிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 4
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு கப்

செய்முறை

பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு மூன்றையும் ஒன்றாகப் சேர்த்து 4 மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊற வைக்கவும்.
அத்துடன் வெந்தயம் போட்டு எல்லாவற்றையும் கழுவி ஆட்டுக்கல் அல்லது கிரைண்டரில் தோசை மாவு போல அரைக்கவும்.
அரைக்கும் போது தேங்காய் துருவல் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
அரைத்த மாவை மறுநாள் எடுத்து அத்துடன் சமையல் சோடா, மஞ்சள் தூள் போட்டு கலந்து வைக்கவும்.
இரண்டு முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக அடித்துக் கலக்கி மாவில் ஊற்றவும்.
பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், பெருஞ்சீரகம் இவற்றை அம்மியில் விழுதாக அரைத்து மாவில் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து மாவை நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் தடவி விட்டு இரண்டு கரண்டி மாவை எடுத்து வட்டமாக ஊற்றி ஒரு மூடியால் மூடி விடவும்.
அடுப்பை நிதானமாக எரிய விட வேண்டும். ஒரு பக்கம் வெந்தால் போதுமானது. வெந்தவுடன் எடுத்து கோழிக்குழம்புடன் பரிமாறவும்.


* பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு மூன்றையும் ஒன்றாகப் சேர்த்து 4 மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊற வைக்கவும்.
* அத்துடன் வெந்தயம் போட்டு எல்லாவற்றையும் கழுவி ஆட்டுக்கல் அல்லது கிரைண்டரில் தோசை மாவு போல அரைக்கவும்.
* அரைக்கும் போது தேங்காய் துருவல் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
* அரைத்த மாவை மறுநாள் எடுத்து அத்துடன் சமையல் சோடா, மஞ்சள் தூள் போட்டு கலந்து வைக்கவும்.
* இரண்டு முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக அடித்துக் கலக்கி மாவில் ஊற்றவும்.
* பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், பெருஞ்சீரகம் இவற்றை அம்மியில் விழுதாக அரைத்து மாவில் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து மாவை நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் தடவி விட்டு இரண்டு கரண்டி மாவை எடுத்து வட்டமாக ஊற்றி ஒரு மூடியால் மூடி விடவும்.
* அடுப்பை நிதானமாக எரிய விட வேண்டும். ஒரு பக்கம் வெந்தால் போதுமானது. வெந்தவுடன் எடுத்து கோழிக்குழம்புடன் பரிமாறவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum