மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி திருவிழா
Page 1 of 1
மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி திருவிழா
சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள வைகுண்ட தர்மபதிக்கு அடுத்தபடியாக சென்னை மணலிபுதூர் அருகே அய்யா வைகுண்ட தர்மபதி உள்ளது. இங்கு வருடம்தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. இந்த வருடம் பத்தாம் நாள் திருவிழாவில் திருத்தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 1ம் நாள் திருவிழா நாளை காலை 6.30 மணியளவில் திருநாம கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 7.30 மணியளவில் மேயர் சைதை துரைசாமி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைக்கிறார். 3ம் நாள் திருவிழாவான ஞாயிற்றுகிழமை மாலை விழா மலரை முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சற்குணபாண்டியன் வெளியிட, தூத்துக்குடி எம்.பி.யான எஸ்.ஆர். ஜெயதுரை பெற்று கொள்கிறார்.
10ம் நாள் திருவிழா 14ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 11.45 மணிக்கு அய்யா திருத்தேரில் தேர்வீதி வலம் வரும் நிகழ்ச்சியில் மகாகுரு பட்டத்து அய்யா பால பிரஜாபதி அடிகளார் திருத்தேரை இழுத்து தொடங்கி வைக்கிறார். ஜெயதுரை எம்.பி., எர்ணாவூர் நாராயணன் எம்எல்ஏ, வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மயிலை பெரியசாமி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, அன்னை அன்கோ சவுந்தர் முருகன், அடையார் ஆனந்தபவன் உரிமையாளர் வெங்கடேசன், நெல்லை தூத்துக்குடி மகமை பரிபாலன சங்க தலைவர் பத்மநாபன், ராயபுரம் மனோ ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக ராபர்ட், எட்வர்ட், ஏ.எச்.தக்காளி மொத்த ஏஜென்சி ஆர். ஆதிமூர்த்தி, ஆதிகுருசாமி, தங்கப்பன் நாடார், பாலம்மாள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 10ம் நாள் திருவிழாவிலும் பகல் மற்றும் இரவில் அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை வைகுண்ட தர்மபதி நிர்வாகிகள் தலைவர் பி.தங்கபெருமாள், இணை தலைவர் தேவதாஸ், பொதுசெயலாளர் வேலுச்சாமி, துணைதலைவர் சுந்தரேசன், பொருளாளர் ஜெயக்கொடி, செயலாளர்கள் அய்யா பில்டர், ஜவான்ஸ், ராமமூர்த்தி, ராமசாமி, காப்பாளர் ராமதாஸ் ஆகியோர் செய்துள்ளனர்.
10ம் நாள் திருவிழா 14ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 11.45 மணிக்கு அய்யா திருத்தேரில் தேர்வீதி வலம் வரும் நிகழ்ச்சியில் மகாகுரு பட்டத்து அய்யா பால பிரஜாபதி அடிகளார் திருத்தேரை இழுத்து தொடங்கி வைக்கிறார். ஜெயதுரை எம்.பி., எர்ணாவூர் நாராயணன் எம்எல்ஏ, வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மயிலை பெரியசாமி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, அன்னை அன்கோ சவுந்தர் முருகன், அடையார் ஆனந்தபவன் உரிமையாளர் வெங்கடேசன், நெல்லை தூத்துக்குடி மகமை பரிபாலன சங்க தலைவர் பத்மநாபன், ராயபுரம் மனோ ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக ராபர்ட், எட்வர்ட், ஏ.எச்.தக்காளி மொத்த ஏஜென்சி ஆர். ஆதிமூர்த்தி, ஆதிகுருசாமி, தங்கப்பன் நாடார், பாலம்மாள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 10ம் நாள் திருவிழாவிலும் பகல் மற்றும் இரவில் அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை வைகுண்ட தர்மபதி நிர்வாகிகள் தலைவர் பி.தங்கபெருமாள், இணை தலைவர் தேவதாஸ், பொதுசெயலாளர் வேலுச்சாமி, துணைதலைவர் சுந்தரேசன், பொருளாளர் ஜெயக்கொடி, செயலாளர்கள் அய்யா பில்டர், ஜவான்ஸ், ராமமூர்த்தி, ராமசாமி, காப்பாளர் ராமதாஸ் ஆகியோர் செய்துள்ளனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி
» மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங
» மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி
» வைகுண்ட ஏகாதசி -தமிழ் திருவிழா - நிறைவு பகுதி
» மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங
» மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி
» வைகுண்ட ஏகாதசி -தமிழ் திருவிழா - நிறைவு பகுதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum