சபரிமலையில் 26ஆம் தேதி மண்டலாபிஷேகம்
Page 1 of 1
சபரிமலையில் 26ஆம் தேதி மண்டலாபிஷேகம்
சபரிமலை ஸ்ரீ ஐயப்பனுக்கு வரும் 26ஆம் தேதி பகல் 12.30 மணியளவில் மண்டலாபிஷேகம் நடைபெற உள்ளது.
திருவாங்கூர் மகாராஜா ஸ்ரீசித்திரை அட்ட திருநாள் 421 பவுன் தங்க அங்கியை சபரிமலை ஐயப்பனின் மூலஸ்தான விக்ரகம் போல் செய்து அளித்தார்.
இந்த தங்க அங்கியை சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜை அன்றும், அதற்கு முதல் நாளிலும் அதாவது ஆண்டில் இரு நாட்கள் மட்டுமே அணிவிக்கப்படும்.
மற்ற நாட்களில் இந்த அங்கி ஆரண்முழா கருவூலத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
26ஆம் தேதி மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு அங்கி கொண்டு வரப்பட்டு வரும் 22 ஆம் தேதி ஆரண்முழா பார்த்தசாரதி கோயிலில் அதிகாலையில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
காலை 7 மணிக்கு சபரிமலை கோயில் தோற்றத்தில் உள்ள ரதத்தில் வைத்து ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்படும். அன்றில் இருந்து 25ஆம் தேதி வரை முக்கிய ஊர்கள் வழியாக ஊர்வலமாகச் சென்று டிசம்பர் 25ஆம் தேதி பம்பை வந்தடையும்.
பம்பை கணபதி கோயிலில் சிறப்பு வழிபாட்டிற்குப் பின்னர் பெட்டகத்தில் வைக்கப்பட்டு தலைச்சுமையாக சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.
மறுநாள் அதாவது டிசம்பர் 26ஆம் தேதி 12.30 மணிக்கு ஐயப்பனுக்கு மண்டலாபிஷேகம் நடைபெற்ற பின்னர் தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை வேதபாராயண முறைப்படி நடைபெறும்.
அன்று மாலை தீபாராதனையின்போது மீண்டும் தங்க அங்கி சார்த்தப்படும்.
திருவாங்கூர் மகாராஜா ஸ்ரீசித்திரை அட்ட திருநாள் 421 பவுன் தங்க அங்கியை சபரிமலை ஐயப்பனின் மூலஸ்தான விக்ரகம் போல் செய்து அளித்தார்.
இந்த தங்க அங்கியை சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜை அன்றும், அதற்கு முதல் நாளிலும் அதாவது ஆண்டில் இரு நாட்கள் மட்டுமே அணிவிக்கப்படும்.
மற்ற நாட்களில் இந்த அங்கி ஆரண்முழா கருவூலத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
26ஆம் தேதி மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு அங்கி கொண்டு வரப்பட்டு வரும் 22 ஆம் தேதி ஆரண்முழா பார்த்தசாரதி கோயிலில் அதிகாலையில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
காலை 7 மணிக்கு சபரிமலை கோயில் தோற்றத்தில் உள்ள ரதத்தில் வைத்து ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்படும். அன்றில் இருந்து 25ஆம் தேதி வரை முக்கிய ஊர்கள் வழியாக ஊர்வலமாகச் சென்று டிசம்பர் 25ஆம் தேதி பம்பை வந்தடையும்.
பம்பை கணபதி கோயிலில் சிறப்பு வழிபாட்டிற்குப் பின்னர் பெட்டகத்தில் வைக்கப்பட்டு தலைச்சுமையாக சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.
மறுநாள் அதாவது டிசம்பர் 26ஆம் தேதி 12.30 மணிக்கு ஐயப்பனுக்கு மண்டலாபிஷேகம் நடைபெற்ற பின்னர் தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை வேதபாராயண முறைப்படி நடைபெறும்.
அன்று மாலை தீபாராதனையின்போது மீண்டும் தங்க அங்கி சார்த்தப்படும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருடன் ஜனவரி 26ஆம் தேதி ஆன்லைன் உரையாடல்
» ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருடன் ஜனவரி 26ஆம் தேதி ஆன்லைன் உரையாடல்
» சபரிமலையில் வழிபாடும், ஐதீகமும்
» சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்
» சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்
» ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருடன் ஜனவரி 26ஆம் தேதி ஆன்லைன் உரையாடல்
» சபரிமலையில் வழிபாடும், ஐதீகமும்
» சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்
» சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum