அட்சய திரிதியை (27-4-2009)
Page 1 of 1
அட்சய திரிதியை (27-4-2009)
சித்திரை மாதத்தில் வரும் 27ஆம் தேதி திங்கட்கிழமை அட்சய திரிதியை நாள் வருகிறது.
சுக்லபட்சத்தில் வரும் திரிதியை திதியில் விரதத்தைக் கடைபிடித்து மேன்மையுறலாம். இந்த நாளில் எண்ணெய் தேய்த்துக் குளித்து விஷ்ணுவை நினைத்து வழிபட வேண்டும்.
அட்சய என்றால் மேலும் மேலும் வளர்ந்து நிறைதல் என்று பொருள். இந்த நாளில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுதல், எப்போதும், எதிலும், எங்கும் நல்லனவற்றையே பார்ப்பதுமாக நம் இதயத்தை விசாலமாக்கிக் கொள்ள இந்த நாளில் உறுதிப் பூண வேண்டும்.
வீட்டில் காலையில் 5 முக விளக்கேற்றி அன்றைய தினம் காலையில் கடைக்குச் சென்று அரிசி, உப்பு, மலர்கள் வாங்கி வந்து பூஜை அறையில் வைத்து, உணவிற்கு பஞ்சம் ஏற்படாமலும், சந்தோஷமும், அமைதியும் நிலவவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
முடிந்தால் ஏழை எளியோருக்கு உணவு பொருள் அல்லது உங்களால் இயன்ற பொருட்களை வாங்கி உதவுங்கள்.
இப்படி செய்தால் சந்தோஷம், அமைதி, நிம்மதி என எல்லாமே வீட்டில் நிறையும் என்பது இன்றைய நாளின் தத்துவம்.
இந்த நாளில் எந்த நல்லது செய்தாலும் அது மென்மேலும் வளரும். பல்கிப் பெருகும்.
ஆனால் இதனை தற்காலத்தில் தங்க நகைக் கடைகள் தங்களது வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் பொருட்டு, மக்களின் கவனத்தை திசை திருப்பி அன்றைய நாள் முழுவதும் நகைக் கடையில் கூட்டத்தை அலை மோத வைத்துள்ளனர்.
தங்கத்தை மட்டும் சேர்த்து வைத்தால் போதுமா வீட்டில் நிம்மதி வேண்டாமா? எனவே இந்த ஆண்டாவது அட்சய திரிதியை அன்று நம் வீட்டில் விளக்கேற்றி நிம்மதிக்கும் அமைதிக்கும் வித்திடுவோம். நகைக் கடைக்காரர்களின் சந்தோஷத்திற்காக அல்ல என்று உறுதிப் பூணுவோம்.
சுக்லபட்சத்தில் வரும் திரிதியை திதியில் விரதத்தைக் கடைபிடித்து மேன்மையுறலாம். இந்த நாளில் எண்ணெய் தேய்த்துக் குளித்து விஷ்ணுவை நினைத்து வழிபட வேண்டும்.
அட்சய என்றால் மேலும் மேலும் வளர்ந்து நிறைதல் என்று பொருள். இந்த நாளில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுதல், எப்போதும், எதிலும், எங்கும் நல்லனவற்றையே பார்ப்பதுமாக நம் இதயத்தை விசாலமாக்கிக் கொள்ள இந்த நாளில் உறுதிப் பூண வேண்டும்.
வீட்டில் காலையில் 5 முக விளக்கேற்றி அன்றைய தினம் காலையில் கடைக்குச் சென்று அரிசி, உப்பு, மலர்கள் வாங்கி வந்து பூஜை அறையில் வைத்து, உணவிற்கு பஞ்சம் ஏற்படாமலும், சந்தோஷமும், அமைதியும் நிலவவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
முடிந்தால் ஏழை எளியோருக்கு உணவு பொருள் அல்லது உங்களால் இயன்ற பொருட்களை வாங்கி உதவுங்கள்.
இப்படி செய்தால் சந்தோஷம், அமைதி, நிம்மதி என எல்லாமே வீட்டில் நிறையும் என்பது இன்றைய நாளின் தத்துவம்.
இந்த நாளில் எந்த நல்லது செய்தாலும் அது மென்மேலும் வளரும். பல்கிப் பெருகும்.
ஆனால் இதனை தற்காலத்தில் தங்க நகைக் கடைகள் தங்களது வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் பொருட்டு, மக்களின் கவனத்தை திசை திருப்பி அன்றைய நாள் முழுவதும் நகைக் கடையில் கூட்டத்தை அலை மோத வைத்துள்ளனர்.
தங்கத்தை மட்டும் சேர்த்து வைத்தால் போதுமா வீட்டில் நிம்மதி வேண்டாமா? எனவே இந்த ஆண்டாவது அட்சய திரிதியை அன்று நம் வீட்டில் விளக்கேற்றி நிம்மதிக்கும் அமைதிக்கும் வித்திடுவோம். நகைக் கடைக்காரர்களின் சந்தோஷத்திற்காக அல்ல என்று உறுதிப் பூணுவோம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தேர்தல் 2009
» தேர்தல் 2009 தேர்தல் 2009
» இயர்புக் 2009
» சுஜாதா - நினைவுப்புனைவு 2009
» நரசிம்ம ஜெயந்தி (7-5-2009)
» தேர்தல் 2009 தேர்தல் 2009
» இயர்புக் 2009
» சுஜாதா - நினைவுப்புனைவு 2009
» நரசிம்ம ஜெயந்தி (7-5-2009)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum