தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இனிமையாகப் பேசுங்கள்

Go down

இனிமையாகப் பேசுங்கள் Empty இனிமையாகப் பேசுங்கள்

Post  birundha Sat Feb 02, 2013 6:19 pm

* எதைக் காப்பாற்றாவிட்டாலும் நாக்கைக் காக்க வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். ஆனால், இன்று உலகம் முழுக்க பேச்சுமயமாகவே மாறிவிட்டது.
* பேச்சைக் குறைத்தால் சண்டை சச்சரவு மறையும்.மேல்நாட்டில் கூட ""பேச்சு வெள்ளி என்றால் மவுனம் தங்கம்'' என்று தான் குறிப்பிடுகிறார்கள்.
* பேசும்போது ஒரு வார்த்தை கூட அதிகமாகிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். "கொட்டி விடலாம்! ஆனால், அள்ளமுடியுமா?' என்று பாமர ஜனங்கள் கூட கேட்பதுண்டு.
* மவுனத்தை ஞானத்தின் எல்லை என்பர். ஒரேயடியாக நம்மால் மவுனமாக இருக்க முடியாவிட்டாலும் முடிந்த அளவுக்கு பேச்சை குறைக்க முயற்சிக்கவேண்டும்.
* எப்போதுமே இனிமையாகப் பேச வேண்டும். மற்றவர் மனதைப் புண்படுத்தும் விதத்தில் பேசுவது நல்லதல்ல. நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் மேல்நிலைக்கு உயர்த்துவதாக மட்டுமே நம் பேச்சு இருக்கவேண்டும்.
* பணத்தை மட்டும் தான் அளவாகச் செலவழிக்க வேண்டும் என்றில்லை. பேச்சையும் கணக்காகப் பேசவேண்டும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum