தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முடிந்த சேவையைச் செய்வோம்

Go down

முடிந்த சேவையைச் செய்வோம் Empty முடிந்த சேவையைச் செய்வோம்

Post  birundha Sat Feb 02, 2013 5:40 pm

* கல்வியின் பயன் நாம் அடக்கமுடையவர்களாக இருப்பது தான். ஆனால், நேர்மாறாக அகங்காரம் கொண்டவர்களாக பிள்ளைகள் வளர்வது பெருங்குறையாகும். பரம்பொருளான கடவுளைப் பற்றி அறிந்து கொள்வதே பயனுள்ள கல்வி.
* நமஸ்காரம் செய்வதைத் "தண்டம் சமர்ப்பித்தல்' என்று சொல்வார்கள். இந்த உடம்பு நம்முடையது அல்ல, கடவுளுடையது என்ற எண்ணத்துடன் கீழே விழுவது தான் சாஷ்டாங்க நமஸ்காரம்.
* அகிம்சையைப் பின்பற்றினால், நாம் இருக்கும் இடத்தில் சாந்தமும் தெய்வீகமும் தவழத் தொடங்கும்.
* வாக்கினாலும், மனத்தினாலும், உடம்பாலும் பாவங்கள் செய்து வருகிறோம். மாறாக புண்ணியசெயல்களைச் செய்து நம் பாவத்தைப் போக்கிக் கொள்ளவேண்டும். நன்மைகளைச் செய்வதற்குத் தான் நமக்கு பிறவியைக் கடவுள் கொடுத்திருக்கிறார்.
*அனாதைப் பிள்ளைகளை ஆதரிப்பது, வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உதவிசெய்வது, பிராணிகளைப் பராமரிப்பது,குறிப்பாகப் பசுவை பாதுகாப்பது, பசித்தவர்களுக்கு அன்னமிடுவது இப்படி எந்தவிதத்திலாவது நாம் முடிந்த சேவைகளைச் செய்யவேண்டும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum