தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தை வரம் அருளும் ராக்காச்சி அம்மன்

Go down

குழந்தை வரம் அருளும் ராக்காச்சி அம்மன் Empty குழந்தை வரம் அருளும் ராக்காச்சி அம்மன்

Post  amma Sat Jan 12, 2013 3:14 pm

தேடி வருவோருக்கு எல்லாம் அருளை வாரி வழங்கும் அம்மன் ராக்காச்சியம்மன். குழந்தை செல்வமே விலைமதிக்க முடியாத அரிய செல்வம் என்பார்கள். அத்தகைய குழந்தை பேரு இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கு குழந்தை வரம் அருளி காத்து அருள்கிறாள் இந்த ராக்காச்சி அம்மன்.

இந்த அம்மன் இருப்பது வசதிகள் நிறைந்த நகர வீதிகளிலோ, ஊர்களின் ஒதுக்குபுறத்திலோ இல்லை. அமைதி தவழும் வனப்பகுதியில் தனியாக கோவில் கொண்டுள்ளாள்.

ராஜபாளையம் மற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்ரிதல் பல்லிளிச்சான் கணவாய அருகே வனதேவதையாக ராக்காச்சி அம்மன் அருள் பாலிக்கிறாள். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு பலவித நோய்களை குணப்படுத்தி மக்களை காத்து வருகிறாள்.

தல வரலாறு

முதலில் இங்கு கல் வடிவில் வைத்து ராக்காச்சி அம்மனை வணங்கி வந்தனர். பின்னர் அவள் காட்சி தந்த உருவில் சிலை வடித்து வழிபட்டு வருகின்றனர். இந்த பழங்கால கல் வடிவ அம்மனும் இங்குள்ளது. இது தவிர இதன் அருகே தீர்த்த கிணறு உள்ளது.

இந்த கிணற்றில் உள்ள தண்ணீரை பருகினால் துளசி வாசம் வரும். கோவில் ஒரமாக ஆத்திமரம் உள்ளது. இதன் இலைகளை அம்மன் தலையில் வைத்து பூஜை செய்து தருகின்றனர். இந்த இலைகளை சாறு எடுத்து ஆருந்தினால் பெண்களுககு குழந்தை பாக்கியம் அம்மன் அருளால் நிச்சயம் கிடைக்கும்.

மேலும் தீராத வயிற்று வலியும் தீரும். ஆவணி மாதம் உத்திராட நச்சத்திரத்தில் இங்கு வருஷா பிஷேக விழா 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் சிவராத்திரி விழாவும் 2 நாட்கள் இங்கு நடக்கிறது.

இருப்பிடம்.

ராஜபாளையம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி இங்கிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் வனப்பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை வரை பஸ் வசதி இருந்தாலும் தனியாக வாகனங்களில் செல்வதே வசதியாக இருக்கும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum