சிங்கார வேலர் கோவில்
Page 1 of 1
சிங்கார வேலர் கோவில்
சூரனை அழிக்க புறப்பட்ட முருகனுக்கு சிவனும், பார்வதியும் ஆயுதங்கள் கொடுத்தனர். பார்வதி தேவி முருகனுக்கு வேல் கொடுத்தார். தாயிடம் இருந்து வேல் பெற்ற முருகன் சிங்கார வேலன் என்றழைக்கப்பட்டார். இந்த நிகழ்வு நடந்த இடம் சிக்கல் என்ற தலமாகும். சிறப்பு மிகு இந்த தலம் நாகை மாவட்டத்தில் நாகை- திருவாரூர் வழித்தடத்தில் நாகையில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
உண்மையில் இத்தலம் நவநீதிஸ்வரரை மூலவராகக் கொண்ட சிவாலயமாகும். இத்தலத்தில் வசிஷ்ட முனிவர், காமதேனு வெண்ணை யால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். பிறகு அந்த லிங்கத்தை எடுக்க முயன்றார். ஆனால் அந்த லிங்கம் எடுக்க முடியாத படி சிக்கிக் கொண்டது. இதன் காரணமாக இந்த ஊருக்கு சிக்கல் என்ற பெயர் ஏற்பட்டது.
சூரசம்ஹாரம் விழா இந்த தலத்தில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சூரனை சம்ஹாரம் செய்வதற்கு ஒரு நாளைக்கு முன்புதான் இத்தலத்தில் தன் தாய் பார்வதியிடம் முருகன் வேலாயுதம் பெற்றதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஐதீக வரலாற்றை பிரதிபலித்து நடத்தி காட்டும் வகையில் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடத்தப்படுவதற்கு முன் தினம் இத்தலத்தில் முருகனுக்கு வேல் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
தாயிடம் இருந்து வேலாயு தத்தை பெற்றதும் முருகன் முகத்தில் வியர்வை அரும்பி வழிந்ததாக குறிப்புகள் உள்ளன. அது உண்மைதான் என்பதை இந்த உலகுக்கு உணர்த்தும் வகையில் இன்றும் சிக்கலில் சிங்கார வேலன் தன் தாயிடம் வேலாயுதத்தை பெற்றதுடன் அவர் முகத்தில் வியர்வைத் துளிகள் அரும்புவதை பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் நிகழும் இந்த அற்புதத்தை முருகனே நடத்துவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
வேல் பெற்றதும் முருக விக்ரகத்தில் இருந்து வியர்வை பெருகுவது ஆச்சரியம்தானேப இத்தகைய மகிமை வாய்ந்த இத்தலம் சிக்கலில் மலை மேல் உள்ளது. இத்தலத்தில் மக்கள் குறை தீர்க்கும் 3 தீர்த்தங்கள் உள்ளன. இத்தலத்தில் உள்ள 8 கல்வெட்டுகள் மூலம் சிங்கார வேலரின் சிறப்புகளை தெரிந்து கொள்ள முடிகிறது. இங்கு 80 அடி உயரத்தில் 7 நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது.
தினமும் இங்கு 6 கால பூஜை நடத்தப்படுகிறது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» சுவர்ணபுரீஸ்வரர் கோவில்
» சிங்கார நாயகியர்
» திருவேங்கடமுடையான் கோவில்
» கொல்லாபுரியம்மன் கோவில்
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
» சிங்கார நாயகியர்
» திருவேங்கடமுடையான் கோவில்
» கொல்லாபுரியம்மன் கோவில்
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum