நாகமலை நாகமலை
Page 1 of 1
நாகமலை நாகமலை
தமிழகத்தில் நாகமலை என்ற பெயரில் பல மலைகள் இருக்கின்றது. சேலம் அருகே இருக்கும் ஒரு மலை, மதுரையை அடுத்திருக்கும் ஒரு மலை, திருச்செங்கோட்டிலிருக்கு ஒரு மலை என, இவை எல்லாமே நாக மலை என்றே அழைக்கப் படுகிறது. சித்தர்களின் நாகமலையானது பொதிகை மலைத் தொடரின் அடிவாரத்தை அண்டியுள்ள சிறியதொரு மலை.
இந்த மலையினைப் பற்றி அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்கு விளக்குவது போல ஒரு பாடல் எழுதியுள்ளார். இந்த மலையானது சிறப்பான சவிட்டு மண்ணைக் கொண்ட வளமான பூமி , இங்கே கற்களும் காணப்படுகிறது, சிறப்பான அண்டக்கல் என்னும் ஒருவகை கற்கள் அதிகளவில் இங்கு காணப்படுகிறது. சுண்ணம் தயாரிக்க இந்த வகை கற்களே பயன்படுகிறது என்றும் சொல்கிறார்..
இந்த வகைப் பூமியை ''அளர்பூமி'' என்று அழைப்பார்கள் என்கிறார். இந்த நாக மலையின் அடிவாரத்தில் பல சித்தர்கள் குடியிருப்புக்கள் நிறைந்திருக்கும் என்றும், மேலும் மலையடிவாரத்தில் குகைகள் பலவும் இருக்கிறது என்றும், அதற்கான வழிகளும் இருக்கிறது என்கிறார்.
சித்தர்களை தரிசிக்கும் ஆர்வமுள்ளவர்கள் இந்தக் குகையை தேடி வருவார்கள் என்றும், அந்த குகைக்குள் செல்லும் பொது அவர்களுக்கு காயகல்ப்பம் கொடுத்து சித்தர்கள் அருள் புரிந்து தங்களுடன் சேர்த்துக் கொள்வார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
இந்த மலையினைப் பற்றி அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்கு விளக்குவது போல ஒரு பாடல் எழுதியுள்ளார். இந்த மலையானது சிறப்பான சவிட்டு மண்ணைக் கொண்ட வளமான பூமி , இங்கே கற்களும் காணப்படுகிறது, சிறப்பான அண்டக்கல் என்னும் ஒருவகை கற்கள் அதிகளவில் இங்கு காணப்படுகிறது. சுண்ணம் தயாரிக்க இந்த வகை கற்களே பயன்படுகிறது என்றும் சொல்கிறார்..
இந்த வகைப் பூமியை ''அளர்பூமி'' என்று அழைப்பார்கள் என்கிறார். இந்த நாக மலையின் அடிவாரத்தில் பல சித்தர்கள் குடியிருப்புக்கள் நிறைந்திருக்கும் என்றும், மேலும் மலையடிவாரத்தில் குகைகள் பலவும் இருக்கிறது என்றும், அதற்கான வழிகளும் இருக்கிறது என்கிறார்.
சித்தர்களை தரிசிக்கும் ஆர்வமுள்ளவர்கள் இந்தக் குகையை தேடி வருவார்கள் என்றும், அந்த குகைக்குள் செல்லும் பொது அவர்களுக்கு காயகல்ப்பம் கொடுத்து சித்தர்கள் அருள் புரிந்து தங்களுடன் சேர்த்துக் கொள்வார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum