தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தங்கள் குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் எந்தக் கடவுளை கும்பிடுவது? குல தெய்வத்தை அறிவது எப்படி? எனக்கு குலதெய்வம் என்னவாக இருக்க முடியும்?

Go down

 தங்கள் குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் எந்தக் கடவுளை கும்பிடுவது? குல தெய்வத்தை அறிவது எப்படி? எனக்கு குலதெய்வம் என்னவாக இருக்க முடியும்?  Empty தங்கள் குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் எந்தக் கடவுளை கும்பிடுவது? குல தெய்வத்தை அறிவது எப்படி? எனக்கு குலதெய்வம் என்னவாக இருக்க முடியும்?

Post  meenu Fri Feb 01, 2013 1:06 pm

நீங்கள் பிறந்த ஊரிலுள்ள கோயில் இறைவன் உங்களுக்கு குலதெய்வமாக முடியும். முன்னோர்களில் எத்தனை பேர் அடிக்கடி எந்தப் பெயரை சூட்டி வந்துள்ளனர் என்று கவனியுங்கள்.

அதுதவிர எப்போதும் முடி காணிக்கை கொடுப்பது, காவடி எடுப்பது இவற்றை முதலில் குலதெய்வமாக தீர்மானிக்கப்பட்ட கடவுளுக்குத்தான் செய்வார்கள். சொந்த பாட்டன், முப்பாட்டன், பிறந்த ஊரிலுள்ள ஆலய தெய்வங்களே குலதெய்வமாக வழிபடப்பட்டன.

தற்காலத்தில் பெரும்பாலானோருக்கு நகர வாழ்க்கை தவிர்க்க முடியாததாகி விட்டது. பிறந்த மண்ணின் ஆலய தெய்வத்தை மறந்து கல்யாண பத்திரிகையில்கூட ‘குலதெய்வ அனுக்ரஹத்தை முன்னிட்டு’ என்னும் வாசகத்தை பலர் சேர்ப்பதில்லை.

‘அக்கரைக்கு இக்கரை பச்சை’ என்றொரு பழமொழி உண்டு. அதில் இக்கரை என்றால் பிறந்த மண். அக்கரை என்றால் தற்காலத்தில் வசிக்கும் இடம். உங்களது முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ள தெய்வங்களே விரைவில் நமது பிரார்த்தனைகளை நிறைவேற்றிவிடும்.

உங்களுடைய பெயரை கவனிக்கும்போது தெரிந்தோ, தெரியாமலோ உங்களின் குலதெய்வத்தின் பெயரை வைத்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

உங்கள் தந்தை வழி தாத்தாவின் ஊருக்குச் சென்று பச்சையம்மன், முத்துமாரி எனும் பெயரில் சுற்றியுள்ள ஊர்களில் தொன்மையான கோயில் இருக்கிறதா என்று பாருங்கள்.

அப்படி இருந்தால் அதுதான் உங்களின் குலதெய்வம். முக்கியமாக அந்தக் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் இருக்க வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum