கூந்தல் உதிர்வை தடுக்க
Page 1 of 1
கூந்தல் உதிர்வை தடுக்க
*கூந்தலை அதன் தன்மைக்கேற்ப மூன்றாகப் பிரிக்கலாம். வறண்டுபோய், பொலிவில்லாமல் பறந்துகொண்டிருக்கும் கூந்தல், `வறண்ட கூந்தல்'! எண்ணெய் தேய்க்காமல் இருந்தாலும், எண்ணெய் தேய்த்தது போல் ஒட்டிக்கொண்டிருக்கும் முடி, `எண்ணெய்த் தன்மை கொண்ட கூந்தல்'! அதிக வறட்சியும் இன்றி, எண்ணெய்த் தன்மையும் இன்றி காணப்படுவது, `சாதாரண கூந்தல்'! இதுதான் பிரச்சினைகள் அதிகம் இல்லாத கூந்தல்.
இவை மட்டுமின்றி இறுதிப் பகுதியில் முறிந்துபோகும் முடி, பார்க்க அழகாக இல்லாத `டல் அன்ட் டேமேஜ்' முடி போன்றவைகளும் உண்டு. இவற்றில் உங்கள் கூந்தல் எப்படிப்பட்டது என்பதை பியூட்டிசியன் மூலம் நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த வகையைச் சேர்ந்த கூந்தலாக இருந்தாலும் ஒரு அடிப்படையான உண்மை இருக்கிறது. அழுக்கு, தூசு போன்றவைகளை நீக்கி சுத்தமாக பராமரிக்கப்படும் கூந்தலே அழகான- ஆரோக்கியமான கூந்தல்
* கூந்தலுக்கு இயற்கையான ஷாம்பு உபயோகிப்பதே நல்லது. கூந்தலின் தன்மைக்கு தகுந்த ஷாம்புவை தேர்ந்தெடுக்கவேண்டும். ஷாம்புகளை மாற்றி மாற்றி பயன்படுத்திக்கொண்டிருக்கக்கூடாது. பஸ்சில் அல்லது இரு சக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள், தூசு நிறைந்த இடத்தில் வேலைபார்ப்பவர்கள் இரண்டு நாளுக்கு ஒருமுறை ஷாம்பு போடவேண்டும். அப்போது அவர்கள் ஷாம்பை குறைந்த அளவிலே பயன்படுத்தவேண்டும்...
* கூந்தலுக்கு ஈரப்பதம், ஜொலிப்பு கிடைக்க கண்டிஷனர் உதவும். மாதத்தில் ஒரு நாள் கண்டிஷனரை கூந்தலில் பூசி, லேசாக சுடும் நீரில் டவலை முக்கி எடுத்து, சூட்டோடு கூந்தலைச் சுற்றிக்கட்ட வேண்டும். கூந்தலுக்கு ஆவி கிடைத்ததும் டவலை மாற்றிவிட்டு, கூந்தலை கழுவிவிட்டுவிட வேண்டும்
* கூந்தல் வளர்ச்சிக்கு ஜிங்க் வகை உணவுகளை சாப்பிடவேண்டும். ஆலிவ் எண்ணெயில், முட்டையை அடித்து கலக்கி அதனை கூந்தலில் தேய்த்து சிறிது நேரம் வைத்துவிட்டு கழுவினால் முடிக்கு மென்மை கிடைக்கும். கூந்தல் சற்று ஈரமாக இருக்கும்போது, இடைவெளி அதிகமுள்ள பற்களை கொண்ட சீப்பை பயன்படுத்தி மெதுவாக கூந்தலை வாரவேண்டும். இப்படி மென்மையாக கூந்தலை கையாளாவிட்டால் முடி நிறைய முறிந்துபோகக்கூடும்.
* எண்ணெய்த் தன்மை கூந்தலைக் கொண்டவர்கள் `ஆயிலி ஹேர்' என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ஷாம்புவை பயன்படுத்தவேண்டும். இந்த ஷாம்பு, கூந்தலில் அதிகமாக இருக்கும் எண்ணெய்த் தன்மையை ஈர்த்துவிடும். இவர்கள் ஷாம்பு போடுவதற்கு முன்பு பயன்படுத்தும் ஷாம்புவின் அளவிற்கு இருமடங்கு தண்ணீர் சேர்த்து, முடியிலும் தலை ஓட்டிலும் நன்றாக தேய்க்க வேண்டும். மூன்று நிமிடங்கள் கடந்ததும், தண்ணீர் ஊற்றி தலையை கழுவவேண்டும். இவர்கள் ஒருபோதும் சுடுநீரால் தலையை கழுவக்கூடாது. கழுவினால் கூந்தலின் எண்ணெய்த்தன்மை அதிகரித்துவிடும். எண்ணெய்த்தன்மை கூந்தலைக் கொண்டவர்கள் பயணம் செய்யும்போது தலையில் தொப்பி அணிந்துகொள்வது நல்லது.
* ஆரோக்கியமான கூந்தலுக்கு புரோட்டின் கலந்த உணவுகள் ஏற்றவை. கொலஸ்ட்ரால் பிரச்சினை இல்லாதவர்கள் முட்டையை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தானியங்கள், பயறுவகைகள் நல்லது. தினமும் உட்கொள்ளும் உணவில் 50 சதவீதம் அளவிற்கு காய்கறி, பழங்கள் இடம்பெறவேண்டும்.
வெங்காயம், மீன், கீரை வகைகள் சிறந்தது. நெல்லிக்காய் கூந்தலுக்கு மிகவும் ஏற்றது. கறிவேப்பிலையை மோரில் அரைத்து பருகுவது நல்லது. உப்பு, காரம், புளிப்பு போன்றவைகளை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது. துரித உணவுகள், செயற்கை நிறம் கலந்த உணவுகளையும் தவிர்க்கவேண்டும்
* வாரத்தில் இரண்டு நாட்களாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். சிறிய வெங்காயத்தை நறுக்கி, தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி வைத்துக்கொண்டு, அதை தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளிக்கவேண்டும். இயற்கை ஷாம்புவை பயன்படுத்துங்கள். டவலால் மென்மையாக தலையை துவட்டவேண்டும். மன அழுத்தம் இருந்தால் முடி உதிரும்.
அதனால் யோகா, தியானம் போன்றவைகளை செய்து மன அழுத்தத்தை நீக்கிவிடுங்கள். மகிழ்ச்சியோடு வாழுங்கள். தினமும் 8 மணிநேரம் தூங்குங்கள். இவ்வாறு செய்து வந்தால் கூந்தல் உதிர்வது நின்று விடும். உப்புதன்மை அதிகம் கொண்ட தண்ணீரில் குளிப்பது, உணவுப் பழக்கத்தில் ஏற்படும் முரண்பாடுகள், அதிக உஷ்ணம் அல்லது அதிக குளிர் போன்றவையும் முடி உதிர்தலை உருவாக்கும்.
புற்றுநோய், டைபாய்டு, காசநோய், தைராய்டு பாதிப்பு போன்றவை இருந்தாலும் முடி அதிகம் உதிரும். வலி நிவாரண மாத்திரை, மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தினாலும் முடி உதிரும். கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு முடி உதிரும். கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும் முடி உதிரக்கூடும்'
இவை மட்டுமின்றி இறுதிப் பகுதியில் முறிந்துபோகும் முடி, பார்க்க அழகாக இல்லாத `டல் அன்ட் டேமேஜ்' முடி போன்றவைகளும் உண்டு. இவற்றில் உங்கள் கூந்தல் எப்படிப்பட்டது என்பதை பியூட்டிசியன் மூலம் நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த வகையைச் சேர்ந்த கூந்தலாக இருந்தாலும் ஒரு அடிப்படையான உண்மை இருக்கிறது. அழுக்கு, தூசு போன்றவைகளை நீக்கி சுத்தமாக பராமரிக்கப்படும் கூந்தலே அழகான- ஆரோக்கியமான கூந்தல்
* கூந்தலுக்கு இயற்கையான ஷாம்பு உபயோகிப்பதே நல்லது. கூந்தலின் தன்மைக்கு தகுந்த ஷாம்புவை தேர்ந்தெடுக்கவேண்டும். ஷாம்புகளை மாற்றி மாற்றி பயன்படுத்திக்கொண்டிருக்கக்கூடாது. பஸ்சில் அல்லது இரு சக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள், தூசு நிறைந்த இடத்தில் வேலைபார்ப்பவர்கள் இரண்டு நாளுக்கு ஒருமுறை ஷாம்பு போடவேண்டும். அப்போது அவர்கள் ஷாம்பை குறைந்த அளவிலே பயன்படுத்தவேண்டும்...
* கூந்தலுக்கு ஈரப்பதம், ஜொலிப்பு கிடைக்க கண்டிஷனர் உதவும். மாதத்தில் ஒரு நாள் கண்டிஷனரை கூந்தலில் பூசி, லேசாக சுடும் நீரில் டவலை முக்கி எடுத்து, சூட்டோடு கூந்தலைச் சுற்றிக்கட்ட வேண்டும். கூந்தலுக்கு ஆவி கிடைத்ததும் டவலை மாற்றிவிட்டு, கூந்தலை கழுவிவிட்டுவிட வேண்டும்
* கூந்தல் வளர்ச்சிக்கு ஜிங்க் வகை உணவுகளை சாப்பிடவேண்டும். ஆலிவ் எண்ணெயில், முட்டையை அடித்து கலக்கி அதனை கூந்தலில் தேய்த்து சிறிது நேரம் வைத்துவிட்டு கழுவினால் முடிக்கு மென்மை கிடைக்கும். கூந்தல் சற்று ஈரமாக இருக்கும்போது, இடைவெளி அதிகமுள்ள பற்களை கொண்ட சீப்பை பயன்படுத்தி மெதுவாக கூந்தலை வாரவேண்டும். இப்படி மென்மையாக கூந்தலை கையாளாவிட்டால் முடி நிறைய முறிந்துபோகக்கூடும்.
* எண்ணெய்த் தன்மை கூந்தலைக் கொண்டவர்கள் `ஆயிலி ஹேர்' என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ஷாம்புவை பயன்படுத்தவேண்டும். இந்த ஷாம்பு, கூந்தலில் அதிகமாக இருக்கும் எண்ணெய்த் தன்மையை ஈர்த்துவிடும். இவர்கள் ஷாம்பு போடுவதற்கு முன்பு பயன்படுத்தும் ஷாம்புவின் அளவிற்கு இருமடங்கு தண்ணீர் சேர்த்து, முடியிலும் தலை ஓட்டிலும் நன்றாக தேய்க்க வேண்டும். மூன்று நிமிடங்கள் கடந்ததும், தண்ணீர் ஊற்றி தலையை கழுவவேண்டும். இவர்கள் ஒருபோதும் சுடுநீரால் தலையை கழுவக்கூடாது. கழுவினால் கூந்தலின் எண்ணெய்த்தன்மை அதிகரித்துவிடும். எண்ணெய்த்தன்மை கூந்தலைக் கொண்டவர்கள் பயணம் செய்யும்போது தலையில் தொப்பி அணிந்துகொள்வது நல்லது.
* ஆரோக்கியமான கூந்தலுக்கு புரோட்டின் கலந்த உணவுகள் ஏற்றவை. கொலஸ்ட்ரால் பிரச்சினை இல்லாதவர்கள் முட்டையை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தானியங்கள், பயறுவகைகள் நல்லது. தினமும் உட்கொள்ளும் உணவில் 50 சதவீதம் அளவிற்கு காய்கறி, பழங்கள் இடம்பெறவேண்டும்.
வெங்காயம், மீன், கீரை வகைகள் சிறந்தது. நெல்லிக்காய் கூந்தலுக்கு மிகவும் ஏற்றது. கறிவேப்பிலையை மோரில் அரைத்து பருகுவது நல்லது. உப்பு, காரம், புளிப்பு போன்றவைகளை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது. துரித உணவுகள், செயற்கை நிறம் கலந்த உணவுகளையும் தவிர்க்கவேண்டும்
* வாரத்தில் இரண்டு நாட்களாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். சிறிய வெங்காயத்தை நறுக்கி, தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி வைத்துக்கொண்டு, அதை தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளிக்கவேண்டும். இயற்கை ஷாம்புவை பயன்படுத்துங்கள். டவலால் மென்மையாக தலையை துவட்டவேண்டும். மன அழுத்தம் இருந்தால் முடி உதிரும்.
அதனால் யோகா, தியானம் போன்றவைகளை செய்து மன அழுத்தத்தை நீக்கிவிடுங்கள். மகிழ்ச்சியோடு வாழுங்கள். தினமும் 8 மணிநேரம் தூங்குங்கள். இவ்வாறு செய்து வந்தால் கூந்தல் உதிர்வது நின்று விடும். உப்புதன்மை அதிகம் கொண்ட தண்ணீரில் குளிப்பது, உணவுப் பழக்கத்தில் ஏற்படும் முரண்பாடுகள், அதிக உஷ்ணம் அல்லது அதிக குளிர் போன்றவையும் முடி உதிர்தலை உருவாக்கும்.
புற்றுநோய், டைபாய்டு, காசநோய், தைராய்டு பாதிப்பு போன்றவை இருந்தாலும் முடி அதிகம் உதிரும். வலி நிவாரண மாத்திரை, மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தினாலும் முடி உதிரும். கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு முடி உதிரும். கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும் முடி உதிரக்கூடும்'
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கூந்தல் உதிர்வை தடுக்கும பீர்
» கூந்தல் உதிர்வை தடுக்கும பீர்
» கூந்தல் உதிர்வை தடுக்கும பீர்
» கூந்தல் உதிர்வை தடுக்கும் உணவுகள்...
» கூந்தல் உதிர்வைத் தடுக்க சில வழிகள்?
» கூந்தல் உதிர்வை தடுக்கும பீர்
» கூந்தல் உதிர்வை தடுக்கும பீர்
» கூந்தல் உதிர்வை தடுக்கும் உணவுகள்...
» கூந்தல் உதிர்வைத் தடுக்க சில வழிகள்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum