தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீரிழிவு நோயால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க..

Go down

நீரிழிவு நோயால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க.. Empty நீரிழிவு நோயால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க..

Post  meenu Sun Jan 27, 2013 5:23 pm


நீரிழிவு நோயால் நமது கண்பார்வை எந்த அளவுக்கு கடுமையாகப் பாதிக்கப்படும், இதனால் ஏற்படும் பார்வை குறைபாட்டை குணமாக்குவது எப்படி என்பது பற்றியெல்லாம் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் சென்னையின் பிரபல கண் மருத்துவர் மற்றும் விழித்திரை நிபுணர் டாக்டர் வசுமதி வேதாந்தம்.

இவர் தி.நகர் இந்தி பிரசார சபா தெருவில் ராதாத்ரி நேத்ராலயா என்ற மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட விழித்திரை அறுவை சிகிச்சை செய்துள்ளார். அவர் நீரிழிவால் ஏற்படும் கண் பார்வை குறைபாடு பற்றி கூறியதாவது:-

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நீரிழிவு நோய் மிக வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுப் படி உலக மக்கள் தொகையில் 4 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை நகர்ப்புற நீரிழிவு நோயாளிகளில் 2 சதவீதம் பேருக்கு விழித்திரை பாதிப்பு இருக்கும். சென்னையை பொறுத்தவரையில் 100 நீரிழிவு நோயாளிகளில் 5 பேருக்கு கண்பார்வை குறைபாடு இருக்கிறது.

உலகிலேயே அளவுக்கு அதிகமான நீரிழிவு நோயாளிகள் இருப்பது இந்தியாவில் தான். இதனால் தான் இந்தியாவை நீரிழிவு நோயாளிகளின் தலைநகரம் என்று வர்ணிக்கிறார்கள்.

நீரிழிவு நோயை டைப்-1, டைப்-2 என்று 2 வகையான பிரித்துள்ளனர். 30 வயதுக்குள் நீரிழிவு நோய் வருவதை டைப்-1 என்றும், 30 வயதுக்கு பிறகு நீரிழிவு நோய் வருவதை டைப்-2 என்றும் பிரித்துள்ளனர்.

டைப்-1ன் வகையை சேர்ந்த நோயாளிகளுக்கு 15 ஆண்டுகளாக நீரிழிவு இருந்தால் அவர்களது கண்பார்வை 100 சதவீதம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

டைப்-2 வகையினருக்கு நீரிழிவு நோய் 15 ஆண்டுகள் நீடித்தால் 30 சதவீதம் பேரின் கண்பார்வை கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே 30 வயதுக்கு பிறகு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்தால், இந்நோயாளிகள் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

அதிலும் விழித்திரை நிபுணரிடம் (ரெட்டினா ஸ்பெஷலிஸ்ட்) சென்று `செக்-அப்' செய் வது மிகவும் நல்லது. சிலருக்கு விழித்திரையில் வலி அதிகமாக இருக்கும். அப்போதே அவர்கள் விழித்திரை நிபுணரிடம் பரிசோதனை செய்து கொண்டால் கண் பார்வை இழப்பில் இருந்து தப்பி விடலாம்.

நீரிழிவு நோயாளிகள் மட்டுமல்ல 40 வயதை கடந்த அனைவரும் கண் மருத்துவரிடம் சென்று கண் பிரஷ்ஷரை பரிசோதித்து கொள்ள வேண்டும். இந்த கண் பிரஷ்ஷர் அதிகமானால் கண்பார்வை குறைபாடு ஏற்படும். பரிசோதனை எப்.எப்.ஏ. என்ற கண் பரிசோதனை மூலம் நீரிழிவால் ஏற்படும் ரத்த நாள கோளாறுகளை கண்டறிய முடியும்.

இப் பரிசோதனைக்கு பிறகு கண்ணுக்குள் இன்ட்ரா விட்ரியாஸ் என்ற ஊசி மருந்தை ஊசி மூலம் செலுத்துவோம். கண்ணுக்குள் வி.இ.ஜி.எப். ரசாயனம் உண்டு. இந்த ரசாயனத்துக்கு எதிராக வி.இ.ஜி.எப். மருந்தை ஊசி மூலம் செலுத்தினால் ரத்தநாள கோளாறு குணமாகும்.

விழித்திரையில் ஏற்படும் கோளாறை தடுக்க சிலிகான் ஆயில் ஊசி மூலம் செலுத்தப்படும். இந்த ஆயிலானது விழித்திரையை பலப்படுத்தும் என்கிறார் கண் மருத்துவர் மற்றும் விழித்திரை சிகிச்சை நிபுணர் டாக்டர் வசுமதி வேதாந்தம்.

இவர் கடந்த 10 ஆண்டுகளாக விழித்திரை நிபுணராக உள்ளார். லண்டனில் புகழ் பெற்று திகழும் மூர்பீல்ட்ஸ் கண் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான விழித்திரை (பீடியாட்ரிக் ரெடினா) சிகிச்சையில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார்.

இவர் கண் விழித்திரையில் நோய் தொற்று ஏற்பட்டால் அதை அகற்றுவதில் சிறந்த நிபுணராக உள்ளார். மிகவும் சிக்கலான கண் அறுவை சிகிச்சை செய்வதிலும் சிறந்து விளங்குகிறார். நீரிழிவு நோயாளிகள் கண் பார்வை இழப்பதை தடுக்க கடந்த பல ஆண்டுகளாக விழிப்புணர்வு முகாம்களும் நடத்தி வருகிறார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum