தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரத்த சோகை பரம்பரை நோயல்ல

Go down

ரத்த சோகை பரம்பரை நோயல்ல Empty ரத்த சோகை பரம்பரை நோயல்ல

Post  meenu Sun Jan 27, 2013 1:53 pm

பொதுவாக சத்து குறைந்த உணவு, குடல் நோய்கள், மாதவிடாய், கர்ப்பம், நீண்ட கால் நோய்கள் இவையே சோகை வருவதற்கு காரணம். இது பரம்பரை நோய் அல்ல! ஒரு சில அனீமியாக்களைத் தவிர! சிக்கில் செல் அனீமியா, போன்ற சில வகைகள் பரம்பரையாக வரும். நோயின் தன்மையைப் பொருத்து சிகிச்சை அமையுமாதலால், அதனை இங்கு சொல்லாமல் விடுகிறேன்.

இரும்புச்சத்து மாத்திரைகளால் தடுக்கலாம். இதனை தடுக்கும் வழிகளை இப்போது சொல்கிறேன். பெரும்பாலான அனீமியாக்கள் வராமல் நம்மால் தடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் மிகவும் பரவலாக காணப்படும் முதல் இரண்டு வகை அனீமியாக்களை இரும்புச்சத்து, வைட்டமின்கள் அடங்கிய உணவு மற்றும் மாத்திரைகள் மூலம் தவிர்க்கலாம்.

பழங்கள், பழச்சாறு, கீரை வகைகள் இவற்றில் தேவையான வைட்டமின்கள் கிடைக்கும். மேலே சொன்ன வைட்டமின்களை தவிர சி வைட்டமினும் இரும்புச் சத்து உடலில் கலக்க உதவும் என்பதால் இதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த மூன்றையும் தேர்ந்த மருத்துவர் மூலம் மாத்திரைகளாகவும் வாங்கி சாப்பிடலாம்.

தேவைக்கு அதிகமாக இரும்பு சத்து மாத்திரைகளை சாப்பிடுவது ஆபத்தானது. கவனம். சும்மாவாவது உடல் அசதியாய் இருக்கிறது என்று நீங்களே மருந்துக்கடைக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிட வேண்டாம். முறையாக உடற்பயிற்சி நல்ல காற்றோட்டமான சூழ்நிலை, உடலையும், மனதையும் மகிழ்ச்சியாய் வைத்திருதல் போன்றவை வளமான செல்கள் உருவாக உதவும் என்கிறார் குளோபல் மருத்துவ மனையைச் சேர்ந்த டாக்டர் எம்.மதுபாஷினி.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum