தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தென் இந்தியாவில் பெருகி வரும் நீரிழிவு நோயாளிகள்

Go down

தென் இந்தியாவில் பெருகி வரும் நீரிழிவு நோயாளிகள் Empty தென் இந்தியாவில் பெருகி வரும் நீரிழிவு நோயாளிகள்

Post  meenu Sun Jan 27, 2013 1:26 pm

இன்று உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மக்கள் தொகையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க நோய்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இவ்வாறு இந்திய மக்களை குறிப்பாக தென்னிந்திய மக்களை அவதியுறவைக்கும் நோய்களில் சர்க்கரை நோயும், ரத்த அழுத்த நோயும் தான் முதலிடம் வகிக்கிறது.

இவை இரண்டும் ஒட்டிப் பிறந்த சகோதரர்களாக இந்திய மக்களை ஆட்டிப் படைக்கின்றன. இன்று 63 சதவிகிதமாக உள்ள நீரிழிவு நோயாளியின் எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் 20 சதவிகிதம் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் நம் உணவு முறையே.

மேலும் நகர வாழ்க்கையின் தாக்கமும் ஒரு காரணம். போதிய உடற்பயிற்சின்மை என பல பாதிப்புகளின் வெளிப்பாடே நீரிழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது. ஒரு குழந்தை இளம் வயதில் இருந்து வாலிப பருவத்திற்கு மாறுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாளமில்லா சுரப்பி மண்டலம் தான்.

இதை ஆங்கிலத்தில் எண்டோகிரைன் சிஸ்டம் என அழைப்பார்கள். இந்த நாள மில்லாச் சுரப்பிகள் தான் மனித உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. இந்த ஹார்மோன்களின் சுரப்பானது வாத, பித்த கபத்தை பொறுத்தே அமைகிக்னறன.

இந்த மூன்றில் எதனுடைய நிலையில் மாறுபாடு ஏற்பட்டாலும் முதலில் பாதிக்கப்படுவது ஹார்மோன்களே. வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு முக்கிய பங்கு வகிப்பது ஹார்மோன்கள் ஆகும். உடலுக்கு தேவையான சர்க்கரை அதாவது இன்சுலினை சுரக்கும் கணையம் பாதிக்கப்படுவதால் உடல் பருமன் ஏற்பட்டு நீரழிவு நோய் உருவாக காரணமாகிறது. இந்த நீரழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது.

ஆனால் வராமல் தடுக்கவும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் முடியும். இத்தகைய நோயின் தாக்கத்தில் இருந்து விடுபட வைப்பது நம் உணவு முறையே. முறையான உணவு தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள்.......

கத்தரி பிஞ்சு, சுரைக்காய், முட்டைக்கோஸ், முள்ளங்கி, வெண்டைக்காய், கோவைக்காய், பீன்ஸ், சாம்பல் பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, காலிபிளவர், வெண்பூசணி, பாகற்காய், வாழைப்பூ, காராமணி, கொத்தவரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வாழை பிஞ்சு, நூல்கோல், முருங்கைக்காய், வெள்ளரிக்காய், இவைகளுடன் கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, புதினா, சேர்த்து பச்ச டியாக தினமும் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயின் பாதிப்பில் இருந்து எளிதில் மீளலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum