தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீரிழிவு நோயாளிகளின் உணவு முறை

Go down

நீரிழிவு நோயாளிகளின் உணவு முறை Empty நீரிழிவு நோயாளிகளின் உணவு முறை

Post  meenu Sun Jan 27, 2013 1:24 pm


நீரிழிவு நோயானது உண்ணும் உணவிற்கு நேரடியாக தொடர்புடையது. அதனால் பொருத்தமான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். ஒவ்வொரு நோயாளியும் அவரது நோயின் தன்மைக்கும், பின் விளைவுகளுக்கும் ஏற்ப உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.

இட்லி, தோசை, வடை மற்றும் இது போன்ற பிற அரிசி உணவுகள் அனைத்திலுமே மாவுப் பொருட்கள் உள்ளன. இவை ரத்ததில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தக் கூடியவை என்பதால் தவிர்த்து விடுதல் நலம்.

வெண்டைக்காய், முட்டைகோஸ், புடலங்காய், சுரைக்காய், வெங்காயம், கொத்தமல்லி, நெல்லிக்காய், நூல்கோல், முள்ளங்கி, வாழைத் தண்டு, வெண்பூசணி, பேரிக்காய், இளநீர், போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை சமைக்காமல் சாப்பிட்டு மற்ற இரண்டு வேளைகளிலும் உணவு உட்கொள்ளலாம்.

பப்பாளி, தக்காளி, மாதுளை, நாவல், அதிகம் பழுக்காத கொய்யா, பிளம்ஸ், நுங்கு, ஆரஞ்சு, அன்னாசி, அத்திப் பழம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகையை ஐஸ் கலக்காமல் சாப்பிடலாம்.

ராகி, கோதுமை, மக்காச்சோளம். பட்டாணி, சோயா பீன்ஸ் முதலியவற்றை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை உடலில் இன்சுலின் அதிகரிக்கச் செய்யும். இவ்வுணவுகள் சர்க்கரையினால் ஏற்படும் பக்க விளைவுகளையும், பார்வைக்குறைவு, சிறுநீரகக் கோளாறு, இதயப் பாதிப்பு, ரத்தக்குழாய் பாதிப்பு, எலும்புகள், நரம்புகள் பாதிப்பு ஆகியவற்றை தடுக்கின்றன.

வெந்தயக் கஞ்சியை காய்ச்சி காலையிலும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர செரித்தல் வேலை செம்மையாக நடைபெறும். உடலுக்கு இன்சுலினுக்கு இணையான மருந்து கிடைக்கும். காய்கறிகளை மசாலா குறைந்த கூட்டாக தயாரித்து உட்கொள்ள வேண்டும்.

முட்டைக்கோஸ், வெங்காயம், வெள்ளரிக்காய், முள்ளங்கி, ஆவியில் வேகவைத்த பசலைக் கீரை, புதினா, வெங்காயத் தழை, ஆகியவற்றை பச்சடியாகச் செய்து நிறைய உட்கொள்ள வேண்டும்.நீர் கலந்த எலுமிச்சம் பழச்சாறினை சர்க்கரை சேர்க்காமல் அருந்தலாம்.

உடல் களைப்புத் தீர காய்கறிகளை அல்லது வெள்ளாட்டுச் சிவப்பு எலும்பு சூப் வைத்து இடைவேளை நேரத்தில் அருந்தலாம். உணவை மூன்று வேலை பெரிய உணவாகவும் இரண்டு வேலை சிற்றுண்டியாகவும் பிரித்து வரிசைப்படுத்தி மொத்தம் ஐந்து வேளையாக உட்கொள்வது நல்லது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum