தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வான்கோழி பிரியாணி

Go down

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வான்கோழி பிரியாணி Empty கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வான்கோழி பிரியாணி

Post  oviya Sun Jun 30, 2013 6:26 pm

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி (அ) ஜீரக சம்பா பச்சரிசி - 3 கப்
வான்கோழியின் பக்கவாட்டு பாகங்கள் - 900 கி
மஞ்சள் பொடி - 1/4 டீ ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 2
நறுக்கிய கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி
நறுக்கிய புதினா இலை - 1 கைப்பிடி
இஞ்சி பேஸ்ட் - 2 டீ ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 1 டீ ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டீ ஸ்பூன்
தேஜீபட்டா (லவங்க செடியிலை) - 2
லவங்கப்பட்டை - 2 அங்குலம்
ஏலக்காய் - 2
லவங்கம் - 4
தயிர் - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 2 டீ ஸ்பூன்
நறுக்காத பச்சைமிளகாய் - 5
எலுமிச்சை - 1
முந்திரிப்பருப்பு - 10
உலர்ந்த திராட்சை - 10
குங்குமப்பூ கலர் - 2 துளி
ரோஜா எஸன்ஸ் - 2 துளி
பால் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* வான்கோழி பிரியாணியின் சுவை அதிகரிக்க வான்கோழி மாமிசத்தை ஒரு நாள் முன்பு மசாலாக்களில் தோய்த்து வைக்க வேண்டும். சரியாக சமைக்கும் முன்பு 24 மணி நேரம் தான் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த மாமிசத்தை ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லது. இதை செய்யும் முறை -

* வான்கோழி மாமிச பாகங்களை நன்றாகக் கழுவி பெரிய துண்டுகளாக வெட்டவும்.

* அதன் மேல் 1/4 கரண்டி மஞ்சள் பொடியை தடவவும்.

* பிறகு 1 கப் தயிர் அதில் 2 டீ ஸ்பூன் மிளகாய்ப்பொடி, கரம் மசாலாப் பொடி, 1 டீ ஸ்பூன் இஞ்சி பேஸ்ட், 1/2 டீ ஸ்பூன் பூண்டு பேஸ்ட், 2 டீ ஸ்பூன் உப்பு, 1/2 மூடி எலுமிச்சைபழச்சாறு இவற்றை கலந்து அதில் வான்கோழி மாமிசத்தை தோய்த்து வைக்கவும். ஒரு பாலித்தீன் பையில் மூடி ஒரு மூடிய பாத்திரத்தில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

க்ரேவி செய்முறை:

* அடிகனமான வாணலியில் 3 டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை காய்ச்சவும்.

* பெருஞ்சீரகம், லவங்கப்பட்டை, ஏலக்காய், லவங்கம், தேஜீபட்டா இவற்றை சேர்க்கவும்.

* பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பாதியை எடுத்து தனியாக வைக்கவும்.

* இப்பொழுது நறுக்கிய தக்காளி சேர்த்து எண்ணெய் கசியும் வரை வதக்கவும்.

* மீதியுள்ள இஞ்சி, பூண்டு பேஸ்ட்டுகளை போட்டு நன்றாக கலந்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இப்பொழுது ஃப்ரிட்ஜில் வைத்த வான்கோழி மாமிசங்களை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

* பிறகு ப்ரஷர் குக்கரில் போட்டு நான்கு விசில் வரும் வரை வேக விடவும். அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

அரிசியை சமைக்கும் முறை:

* அரிசியை கழுவி அரை மணிநேரம் ஊற விடவும்.

* அடுப்பில் பத்து கப் தண்ணீரை கொதிக்க விடவும். அத்துடன் எலுமிச்சை சாறு, 2 டீ ஸ்பூன் உப்பு சேர்த்து கிளறவும்.

* பிறகு ஊற வைத்த அரிசியை சேர்க்கவும். பாதி வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி நீரை வடிகட்டவும். வடிகட்டிய அரிசியை தனியே வைக்கவும்.

அலங்கரிக்க:

* முந்திரிப்பருப்பையும், உலர்ந்த திராட்சையையும் ஒரு வாணலியில் ஒரு டீ ஸ்பூன் நெய் விட்டு வதக்கவும். தனியே எடுத்து வைக்கவும்.

பிரியாணி அடுக்குகளை தயாரித்தல்:

* ஒரு பேக்கிங் தட்டை எடுத்து அதில் பாதி அரிசியை பரவலாக நிரப்பவும்.

* இதன் மேல் வான்கோழி கிரேவியை பரப்பவும்.

* மறுபடியும் இன்னொரு அடுக்கு அரிசியை பரவலாக நிரப்பவும்.

* இதன் மேல் நறுக்கிய புதினா இலை, நறுக்கிய கொத்தமல்லி, நறுக்காத பச்சை மிளகாய், வதக்கிய வெங்காயம், முந்திரிப்பருப்பு, மற்றும் உலர்ந்த திராட்சையை பரப்பவும்.

* 2 டீ ஸ்பூன் பாலுடன் இரு துளிகள் ரோஜா எஸன்ஸையும், குங்குமப்பூ கலரையும் கலக்கவும்.

* இதை அரிசியின் மேல் பாகத்தில் தூவவும்.

* இவற்றின் மேல் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை தடவவும்.

* தட்டை ஒரு அலுமினிய ஃபாயிலால் மூடவும். முன்பே சூடுபடுத்திய அவனில் 350 டிகிரி எஃப் சூட்டில் ஒரு மணி நேரம் சமைக்கவும்.

* வான்கோழி பிரியாணியை சூடாக வெங்காய பச்சடியுடனும், கோழி கிரேவியுடனும் பரிமாறலாம்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum