தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அம்மா ஓ.கே. சொன்னால்தான் நடிப்பேன் : காவ்யா மாதவன் நிபந்தனை .

Go down

அம்மா ஓ.கே. சொன்னால்தான் நடிப்பேன் : காவ்யா மாதவன் நிபந்தனை . Empty அம்மா ஓ.கே. சொன்னால்தான் நடிப்பேன் : காவ்யா மாதவன் நிபந்தனை .

Post  ishwarya Sat May 25, 2013 2:50 pm

‘ஸ்கிரிப்டை படித்து அம்மா ஓ.கே. சொன்னால்தான் நடிப்பேன்’ என்றார் காவ்யா மாதவன். தமிழில் ‘சாது மிரண் டால்’, ‘என் மன வானில்’, ‘காசி’ மற்றும் ஏராளமான மலையாள படங்களில் நடித்திருப்பவர் காவ்யா மாதவன். அவர் கூறியதாவது: எனது வேடங்கள் எப்போதுமே குடும்ப பின்னணியை சார்ந்ததாகவே இருக்கும். என்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களின் ஸ்கிரிப்டை முதலில் எனது அம்மாதான் படிப்பார். அவருக்கு கதையின் தன்மையும், அதை மக்கள் ரசிப்பார்களா? என்பதையும எளிதாக கணிக்க முடியும். அவர் படித்துவிட்டு ஓ.கே. சொன்னால்தான் அந்த ஸ்கிரிப்டை நான் படிப்பேன். குறைந்தது ஐந்தாறு முறையாவது படித்துவிடுவேன். அதன்பிறகே ஒப்புக்கொள்வேன். கடந்த ஆண்டு ம ட்டும் குறைந்தது 10 ஸ்கிரிப்டாவது படித்திருப்பேன்.

அதில் ஒன்றிரண்டுதான் ஒப்புக்கொண்டேன். ஒன்றுக்கு மேற்பட்ட ஹீரோயின்கள் நடிக்கும் படங்களையும் ஒப்புக்கொள்கிறேன். அதில் என்னுடைய கேரக்டர் பிடித்திருக்க வேண்டும். மம்மூட்டியுடன் ‘பவுட் டியுடு நமதில்’, மோகன்லாலுடன் ‘லோக்பால்’, சுரேஷ்கோபியுடன் ‘டுவென்டி 20’ படங்களில் நடித்தேன். நடிகையானதால் எனக்கு கட்டுப்பாடு இருக்கிறது. சுதந்திரமாக வெளியில் செல்ல முடியாது. சிறுவயதிலிருந்தே நடிப்பதால் எனது சுதந்திரம் குறைந்திருந்தது. சமீபத்தில் குடும்பத்துடன் ஆஸ்திரேலியா சென்றேன். அங்கு மக்களோடு மக்களாக கலந்துவிட்டேன். சாலையில் சுதந்திரமாக சுற்றித்திரிந்ததுடன் பாட்டு பாடிக்கொண்டும் அரட்டையடித்துக்கொண்டும் சென்றேன். நடிகையாக சின்னச் சின்ன சந்தோஷங்களை இழந்தாலும் அதன் மூலம் கிடைக்கும் பெயர் பெரியது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum