தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உலகளந்த பெருமாள் கோயிலில் கருடசேவை

Go down

உலகளந்த பெருமாள் கோயிலில் கருடசேவை Empty உலகளந்த பெருமாள் கோயிலில் கருடசேவை

Post  ishwarya Fri May 24, 2013 12:59 pm

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கருடசேவையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பெருமாள்.

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் கருடசேவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இந்த ஒரே கோயிலில் திருஊரகம், திருநீரகம், திருகாரகம், திருகார்வானம் என்ற 4 திவ்ய தேசங்கள் உள்ளன.

நான்கு திவ்ய தேசத்து பெருமாளையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார். இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் 10 நாள்கள் பிரம்மோற்சம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

÷3-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை கருடசேவை நடைபெற்றது. கருட வாகனத்தில் சுவாமி திருவிக்ரமன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

÷வரும் ஜனவரி 24-ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும். ஜனவரி 26-ஆம் தேதி தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செய்துள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum