தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விடிய, விடிய நடந்த கள்ளழகரின் எதிர்சேவை: நாளை வைகை ஆற்றில் இறங்குகிறார்

Go down

விடிய, விடிய நடந்த கள்ளழகரின் எதிர்சேவை: நாளை வைகை ஆற்றில் இறங்குகிறார் Empty விடிய, விடிய நடந்த கள்ளழகரின் எதிர்சேவை: நாளை வைகை ஆற்றில் இறங்குகிறார்

Post  ishwarya Thu May 23, 2013 1:03 pm

மதுரை நகருக்கு முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் புறப்பாடு நேற்று நடைபெற்றது. அதன்படி அழகர் கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் நேறிக்கம்புடன், மேள, தாளம் முழங்க தங்கப்பல்லக்கில் பக்தர்கள் வெள்ளத்தில் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் கோலத்தில் மதுரையை நோக்கி புறப்பட்டார்.

பின்னர் கோவில் முன்புள்ள 18-ம் படி கருப்பணசுவாமி சன்னதி எதிரில் உள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு தீபாராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தன. பின் கருப்பண சுவாமியிடம் அனுமதி பெற்று கள்ளழகர் புறப்பட்டார். கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் உள்பட வழிநெடுக பக்தர்கள் அவரை எதிர்கொண்டு (எதிர்சேவை) வரவேற்று தரிசனம் செய்தனர்.

சாமி தரிசனம் செய்ய வெளி மாவட்டம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாட்டுவண்டி, வேன் போன்றவற்றில் குடும்பத்துடன் வந்திருந்தனர். இன்று காலை 6 மணிக்கு கள்ளழகர் மூன்று மாவடிக்கு வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை வரவேற்று சாமி தரிசனம் செய்தனர்.

காலை 8.30 மணியளவில் புதூரில் எதிர்சேவை நடை பெற்றது. இதனை தொடர்ந்து புதூர் மாரியம்மன் கோவில், ரிசர்வ் லைன், டி.ஆர்.ஓ. காலனி, அவுட் போஸ்ட் ஆகிய பகுதிகளில் கள்ளழகரை பக்தர்கள் வரவேற்று சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கள்ளழகர் திருமஞ்சனம் நடக்கிறது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. அதன்படி நாளை காலை 7.31 மணி முதல் 7.45 மணிக்குள் கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார். அப்போது மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆற்றுக்குள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

அதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும் அங்கபிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அங்கிருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்கு வண்டியூர் வீரராக பெருமாள் கோவிலுக்கு கள்ளழகர் புறப்படுகிறார்.

அங்கு விடிய, விடிய திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

பெரிய தேரில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மற்றொரு தேரில் மீனாட்சி அம்மனுக்கும் எழுந்தருளினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 4 மாசி வீதிகளிலும் தேர் பக்தர்கள் மத்தியில் அசைந்தாடி வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்
» சித்திரை திருவிழாவில் கோலாகலம் : கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் ; வரலாறு காணாத மக்கள் வெள்ளம்
» பிறந்தது ஆங்கில புத்தாண்டு விடிய விடிய கொண்டாட்டம் : சிறப்பு பிரார்த்தனை, வழிபாடுகள்
»  பிறந்தது ஆங்கில புத்தாண்டு விடிய விடிய கொண்டாட்டம் : சிறப்பு பிரார்த்தனை, வழிபாடுகள்
» பிறந்தது ஆங்கில புத்தாண்டு விடிய விடிய கொண்டாட்டம் : சிறப்பு பிரார்த்தனை, வழிபாடுகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum