தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தையின்மைக்கு செயற்கை சிகிச்சை வெற்றி தரும்!

Go down

குழந்தையின்மைக்கு செயற்கை சிகிச்சை வெற்றி தரும்! Empty குழந்தையின்மைக்கு செயற்கை சிகிச்சை வெற்றி தரும்!

Post  ishwarya Mon May 13, 2013 5:57 pm

வாழ்க்கையில் வேறு எந்த விஷயத்தாலும் ஈடுசெய்ய முடியாத விஷயம் குழந்தை! சில தலைமுறைகளுக்கு முன்பு வரை, குழந்தை இல்லாத தம்பதியருக்கு அது ஒரு சாபமாகவே இருந்தது. இன்றைய நவீன மருத்துவத்தில் எப்படிப்பட்ட குறையுள்ள தம்பதிக்கும் குழந்தை பாக்கியம் சாத்தியம். குழந்தையில்லாத தம்பதிக்குப் பரிந்துரைக்கப்படுகிற பிரதான சிகிச்சைகளில் ஐ.யு.ஐ. எனப்படுகிற inseminatio intrauterinen என்பது முக்கியமானது. அதிலுள்ள சாதக, பாதகங்கள் என்னென்ன? விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

‘‘ஐ.யு.ஐ. என்பது மிக எளிமையான, செலவு குறைந்த ஒரு சிகிச்சையும்கூட. சிகிச்சையை மேற்கொள்ளும் பெண்ணின் கருக்குழாய் அடைப்பின்றியும், கணவரின் விந்தணு எண்ணிக்கை குறைந்தது 5 மில்லியனும், அதில் 50 சதவிகிதம் நகரும் தன்மையுடனும் இருக்க வேண்டும். கர்ப்பப்பை உட்பகுதியில் கட்டியோ, சதை வளர்ச்சியோ இருக்கக் கூடாது. என்டோமெட்ரியம் எனப்படும் திசுவின் வளர்ச்சி கருமுட்டை வெளிவரும் நாளில், 8 முதல் 10 மி.மீ. வளர வேண்டும். அவ்வளவுதான்!

இச்சிகிச்சையின் போது சினைமுட்டைப்பை எனும் சூலகத்தை மருந்துகள், ஹார்மோன் ஊசி மூலம் ஊக்குவித்து, தரமான 1 அல்லது 2 முட்டைகள் வளர வைக்கப்படுகின்றன. கருமுட்டை 18 – 20 மி.மீ. வரும்போது, அதன் முதிர்ச்சிக்காக ஹெச்.சி.ஜி. ஊசி போடப்படுகிறது. ஊசி போட்டு 36 முதல் 40 மணி நேரம் கழித்து கருமுட்டை வெடித்து, உள்ளிருக்கும் உயிரணு வெளிவருகிறது.

அது வெடித்துவிட்டதா என ஸ்கேன் மூலம் பார்த்து, பிறகே ஐ.யு.ஐ. சிகிச்சை செய்யப்படும். இதற்காக கணவரின் விந்தணுக்கள் சேகரிக்கப்பட்டு, அதற்கென்றே உள்ள சிறப்பு மீடியமில் கலக்கப்பட்டு, பிராசஸ் செய்யப்படுகிறது. அது ஒரு மெலிதான குழாயில் ஏற்றப்பட்டு, மனைவியின் கருப்பையில் செலுத்தப்படும். இதில் எந்த வலியும் இருக்காது. மயக்க மருந்தும் தேவையில்லை. ஐ.யு.ஐ. சிகிச்சை தோல்வியடைய சில காரணங்கள் உண்டு. அவை…

கணவரின் விந்தணு எண்ணிக்கை 5 மில்லியனுக்கும் குறைவாக இருத்தல் (வைரஸ் காய்ச்சல், மன உளைச்சல் காரணமாக).

சில பெண்களுக்கு உள் ரத்தக்கசிவு உண்டாகுதல்.

விந்தணுவை உள்ளே செலுத்தியதும் 95 சதவிகிதம் அது பின்னோக்கி, வெளியே வந்து விடுதல்.

பிளாஸ்டிக் குழாயின் வழியே உள் செலுத்த முடியாதபடி ‘செர்விகல் ஸ்டினோசிஸ்’ எனும் பாதிப்பு இருத்தல்.

இன்னும் சில பெண்களுக்கு கருமுட்டை வெடித்து, உயிரணு வெளியே வராமலிருக்கும்.

குழாயானது சிறிது அதிகமாக உள்ளே சென்று, அது கர்ப்பப்பையின் மேல்பகுதியைத் தொட்டுவிடும் பட்சத்தில், உடலுக்குள்ளேயே பிராஸ்டோ

கிளாண்டின் எனப்படுகிற வேதிப்பொருள் வெளியாகி, இரண்டு உயிரணுக்களையும் இணைய விடாமல் செய்து விடும்.

6 முறை வரை இந்த சிகிச்சையை செய்யலாம். ஒருவேளை தோல்வியடைந்தால் டயக்னாஸ்டிக் ஹிஸ்டெரோ லேப்ராஸ்கோப்பி செய்து பார்த்துவிட்டு, பிறகு ஐ.யு.ஐ. சிகிச்சையைத் தொடர்ந்தால் கட்டாயம் வெற்றிதான்!


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum