தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிறரை அழ வைக்காதே-(குழந்தையானந்தசாமி)

Go down

பிறரை அழ வைக்காதே-(குழந்தையானந்தசாமி) Empty பிறரை அழ வைக்காதே-(குழந்தையானந்தசாமி)

Post  ishwarya Thu May 09, 2013 6:40 pm

பிறரை அழ வைக்காதே

* சில மனிதர்கள் தான் சம்சாரத்தின் அக்கரையை
அடைகிறார்கள். அதிகமான மனிதர்கள் தர்மத்தை கேலி செய்து
இக்கரையிலேயே ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

* ஒருவன் யுத்தத்தில் லட்சக்கணக்கான மனிதர்களை
ஜெயித்தாலும், உண்மையில் வீரனில்லை. எவன் தன்னைத் தானே
ஜெயித்துக் கொள்கிறானோ அவன்தான் உண்மையான வீரன்.

* பாபம் நம்மை அடைவதில்லை என்று கவலையில்லாமல் இருக்கக்
கூடாது. எப்படி சொட்டு சொட்டாக நீர் விழுந்து பானை
நிரம்பிவிடுகிறதோ, அப்படியே மனிதனும் படிப்படியாக
பாவியாகிறான்.

* யாரையும் கடினமான சொற்களால் பேசக்கூடாது. கடினமான
வார்த்தைகளைப் பேசுவதனால் கடினமான சொற்களைக் கேட்க
வேண்டியதிருக்கும். பிறரை துன்புறுத்துவதால் நீயும்
துன்பத்தை அனுபவிக்க வேண்டி இருக்கும். பிறரை அழ வைப்பதால்
நீயும் அழ வேண்டியிருக்கும்.

* யார் ஒருவரால் ஆசைகளை ஜெயிக்க முடியவில்லையோ, அவன்
விபூதி பூசியும், உபவாசம் இருந்தும் சாதனைகள் செய்தாலும்
மனதை பவித்ரமாக்கிக் கொள்ள முடியாது.

* பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன், தான் முதலில்
அதன்படி நடக்க வேண்டும். தன்னையே வசியப்படுத்துபவனால் தான்
பிறரை வசியப்படுத்த முடியும். தன்னை வசியப்படுத்துதல்
என்பது கடினமான காரியம்.

* பாபம், புண்ணியம் எல்லாம் நம்முடைய செயல்கள் தான்.
ஒருவன் மற்றொருவனைப் பவித்ரமாக்க முடியாது.

* இந்த உலகமாவது நீர்க்குமிழி போல், கானல் நீர் போல்
ஆனது. அதனால் இந்த ஜெகத்தைச் துச்சமாக மதிப்பவனை மரணம்
வந்து அடைவதில்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum