தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாரடைப்பில் இருந்து பெண்கள் விடுதலை ஆவது எப்படி?

Go down

மாரடைப்பில் இருந்து பெண்கள் விடுதலை ஆவது எப்படி? Empty மாரடைப்பில் இருந்து பெண்கள் விடுதலை ஆவது எப்படி?

Post  meenu Thu Jan 24, 2013 12:20 pm

மாரடைப்பு ஆண்களைப் போலவே பெண்களுக்கும் ஏற்பட ஆரம்பித்து விட்டது. காரணம் நாகரீக வளர்ச்சி அசுரத்தனமான வாழ்க்கை முறையே ஆகும். மேலும் இன்றைய பெண்களிடம் உடல் உழைப்பை அதிகம் காணமுடிவதில்லை. எல்லாவற்றுக்கும் எந்திரம் வந்து விட்டது. துணி துவைப்பது முதல் சமையல் செய்வது வரை எல்லாமே எந்திரம்தான்.

பெண்களும் தொடர்களை சேனல் மாற்றி மாற்றி, டி.வி.யில் பார்த்துக்கொண்டு அதுவே நிஜம் என்று நம்பி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை மறந்து விட்டார்கள். இதனால் பெண்களுக்கே உரிய ஈவு, இரக்கம், தயாளகுணம், பரிவு போன்ற நல்ல குணங்கள் பெண்களிடம் குறைந்து வருகின்றன.

இது வேதனைக்குரிய விஷயம். இது ஒருபுறம் இருக்க, மாரடைப்பு விஷயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இயற்கையிலேயே ஒருசில வித்தியாசங்கள் காணப்படுகின்றன. ஹார்மோன் தொடர்பான விஷயம் தான் அது.

மாதவிடாய் நிற்பதற்கு முன்பு பெண்ணின் உடம்பில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனானது அவர்களது உடம்பில் உள்ள நல்ல கொழுப்பினை (எச்.எல்.டி) அதிகரிக்கச் செய்வதால், அவர்களை மாரடைப்பு எளிதில் தாக்குவதில்லை. ஆனால் இந்த வேறுபாடு மாதவிடாய் நின்ற பிறகு மாறி விடுகிறது.

இதனால் 54 வயதுக்கு மேல் ஒரு ஆணுக்கு ஏற்படக்கூடிய அளவுக்கு பெண்ணுக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. அதிக மன அழுத்தம், ஏழ்மை, அதிகமாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுதல், கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடுதல், உணவில் அதிக கொழுப்பு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக உடல் எடை, தைராய்டு கோளாறு, ரத்தத்தில் உள்ள அதிக கொழுப்பு மற்றும் டிரைகிளிசரைடு போன்றவையும் பெண்களுக்கு மாரடைப்பு வர முக்கிய காரணங்கள் ஆகும்.

மேலும் இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில் பெண்களுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. மனம் மற்றும் உடலளவில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதுவும் மாரடைப்பு வருவதற்கு ஒரு காரணமாகச் சொல்லலாம். குடும்பத்தில் பெற்றோருக்கு இருதய நோய் இருந்தாலும் பெண்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்புள்ளது.

கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் வரலாம். அவர்களுக்கு பிற்காலத்தில் மாரடைப்பு வர அதிக வாய்ப்பு உள்ளது. இடுப்பைச்சுற்றி அதிக சதை போட்டிருந்தால் அது இதயத்தை அதிகமாக தாக்கும். ஏனெனில் உடல் பருமானவர்களுக்கு மற்றவரைக்காட்டிலும் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் ரத்தத்தில் கொழுப்பு உண்டாகிறது.

சீரான உடற்பயிற்சி, அவசரமான வாழ்க்கை முறையை நிதாணித்தல், அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தவிர்த்தல், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் இருந்தால் கட்டுப்படுத்துதல், வயதுக்கு மேல் ஆண்டுக்கொரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் இருதய நோய் வருவதை தவிர்க்கலாம்.

மாதவிடாய் நின்ற அல்லது கர்ப்பப்பை நீக்கப்பட்டதன் மூலம் மாதவிடாய் தடைபட்ட பெண்களுக்கு கர்ப்ப நோயைத் தடுப்பதற்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாத்திரைகள் தரப்படுகின்றன. இதன் வாயிலாக பெண்களுக்கு மாரடைப்பு நோய் தவிர்க்கப்படுவதுடன் எலும்புகளும் உறுதி பெறுகின்றன. மேலும் ரத்தத்தில் நல்ல கொழுப்பு அதிகரிக்கிறது.

தவிர ரத்தத்தின் உறையும் தன்மையைக் குறைத்து ரத்தக்குழாயில் அடைப்பை நீக்குகிறது. ரத்தக் கொதிப்பைக் குறைக்கிறது. மேலும் உடம்பில் ஏற்படும் வயோதிகத்தைக் குறைப்பதுடன் இடுப்பைச் சுற்றியுள்ள ஊளைச் சதையைக் குறைக்கிறது. மாதவிடாய் நிற்பதால் உண்டாகும் அதிகப்படியான வியர்வை.

உடல் உஷ்ணம், தூக்கமின்மை ஆகியவற்றை மட்டுப்படுத்துகிறது. மூட்டுவலி, நீர்த்தாரையில் ஏற்படும் சுருக்கம், வறட்சி, எரிச்சல் ஆகியவற்றையும் மட்டுப்படுத்துகிறது. பக்கவாதம் வருவதையும் தடுக்கிறது. இருந்தாலும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாத்திரை குறித்து மருத்துவர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது அது அஜீரணம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றே பல நேரங்களில் கருதி விடுகிறார்கள். ஏனெனில் இருதய நோயினால் வரும் நெஞ்சு வலியானது நெஞ்சு எரிச்சல், வயிறு உப்பிசம், தோள்பட்டை, கழுத்து, முதுகுவலி போன்றே அமைகிறது. இவ்வாறு ஏற்படுவதை அலட்சியம் செய்து கை வைத்தியம் செய்து கொள்ளக்கூடாது.

இது நோய் முற்றுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து விடும். நெஞ்சுப் பகுதியில் எந்தவிதமான வேதனை இருந்தாலும் அதற்கு உடனடியாக ஒரு ஈசிஜி பரிசோதனை செய்து பார்த் துக்கொள்ள வேண்டும். ஈசிஜியில் மாறுதல் இல்லாமல் இருந்தாலும் கூட நமக்கு சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் இருதய நோய்க்கான மருந்துகளைக் கொடுத்துப் பார்த்து வலி குறைகிறதா என்று பார்ப்பதில் தவறில்லை.

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் அதிக கொழுப்பு, உடையவர்களுக்கு ஈசிஜி தவிர டிஎம்டி எனப்படும் பரிசோதனை செய்து அதில் ஏதேனும் குறைபாடு தென்பட்டால் கரோனரி ஆஞ்சியோ கிராம் செய்து பார்த்து அதில் ஏதேனும் ரத்தக்குழாய் அடைப்பு தென்பட்டால் ஆஞ்சியோ பிளாஸ்டி அல்லது பைபாஸ் சர்ஜரி செய்து கொள்ளலாம்.

இப்போது இதைவிட நவீன வசதிகள் எல்லாம் வந்து விட்டன. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படாமலேயே 64 ஸ்லைஸ் சிடி ஆஞ்சியோ கிராபி என்ற சிகிச்சையை செய்து கொள்ளலாம். இந்த சிகிச்சையில் 5 நிமிடத்தில் எந்த இடத்தில் அடைப்பு இருக்கிறது என்பது தெரிந்து விடும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum