தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெருமூளை வளர்ச்சிக் குறைவால் பாதிக்கப்படும் `கர்ப்ப' குழந்தைகள்

Go down

பெருமூளை வளர்ச்சிக் குறைவால் பாதிக்கப்படும் `கர்ப்ப' குழந்தைகள் Empty பெருமூளை வளர்ச்சிக் குறைவால் பாதிக்கப்படும் `கர்ப்ப' குழந்தைகள்

Post  meenu Wed Jan 23, 2013 1:29 pm

கர்ப்பக் குழந்தைகளுக்கு பெருமூளைப் பகுதியில் வளர்ச்சியின்மை ஏற்படும். பிறக்கும் குழந்தைகளில் 8 சதவீதம் பேர் பெருமூளை வளர்ச்சி குறைபாட்டுடன் பிறக்கிறார்கள். இந்த குழந்தைகளுக்கு நெற்றியின் மேல் பகுதி வளர்ச்சி இருக்காது. அதனால் உருண்டையான தலைக்கு பதிலாக சப்பையாக இருக்கும். மேல் பகுதி சூம்பி, குரங்கின் தலைபோல் தோன்றும். இந்த பாதிப்பு கொண்டவைகளில் சில குழந்தைகளுக்கு முதுகுத்தண்டுவட பகுதி, கண்ணாடிபோல் மென்மையாக வெளியே தெரியும்.

பிரசவத்தின்போது, இத்தகைய குழந்தைகளை மென்மையாக கையாளாவிட்டால் அந்தப் பகுதியில் சிதைவு எற்பட்டுவிடும். இந்த பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளுக்கு உயிர் இருக்கும். இதய துடிப்பும் நன்றாக இருக்கும். உடல் உறுப்புகள் வளரும். பார்வையும் இருக்கும். ஆனால் உடலில் உணர்வு இருக்காது என்பதால், குழந்தை அசையாது.
சிறுநீர், மலம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் சக்தியும் இருக்காது. இந்த குழந்தைகள் எதிர்காலத்தை வீல் சேரில் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும்''

இத்தகைய பாதிப்பு ஏற்பட என்ன காரணம்?

பெருமூளைப் பகுதி வளர்ச்சி குறைபாட்டிற்கு `போலிக் ஆசிட்' பற்றாக்குறைதான் காரணம். பெண் கர்ப்பமான நான்கு மாதங்களில் வயிற்றுக் குழந்தைக்கு மூளையும், முதுகுத்தண்டுவடமும் முழுமையாக வளரும். அந்த நரம்புகளுக்கு போலிக் ஆசிட் மற்றும் பி-12 வைட்டமின் சத்துக்கள் தேவை.

கர்ப்பிணி தாய்மார்கள் சமச்சீரான சத்துணவு சாப்பிட்டு, தேவையான சத்துக்களை பெற வேண்டும். தாயின் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்தால், குழந்தைக்கு இத்தகைய மூளை வளர்ச்சி பாதிப்பு ஏற்படாது. தேவையான சத்துணவுகளை சாப்பிட வாய்ப்பில்லாத பெண்கள், கர்ப்பமான தொடக்கத்திலே டாக்டரிடம் சென்று, அவர் ஆலோசனைப்படி போலிக் ஆசிட் மாத்திரைகளை உட்கொள்ளவேண்டும்.

எந்தெந்த உணவுகளில் போலிக் ஆசிட்சத்து இருக்கிறது?

சைவ உணவுகளில் கீரை வகைகளில் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கின்றன. அசைவ உணவுகளில் மீன், முட்டை, மாமிசத்தில் இருக்கிறது. கர்ப்பமானதில் இருந்து, தேவையான சத்துணவுகளை உண்ணவேண்டும். கர்ப்பமான 16 வாரத்திற்குள் முக்கிய உறுப்புகள் வளர்ந்துவிடுவதால், அவை முழு வளர்ச்சி பெறும் அளவிற்கு கர்ப்பிணிகள் அந்த காலகட்டத்தில் சத்துணவுகளை உட்கொள்ளவேண்டும்.

இப்போதெல்லாம் கர்ப்பத்திற்கு ஒரு பெண் தயாராகிவிட்டாலே, மூன்று மாதத்திற்கு முன்னால் இருந்தே போலிக் ஆசிட் மாத்திரைகளை உட்கொள்ள பரிந்துரைக்கிறோம். கர்ப்பமான நான்காம் மாதம் வரை அதை தொடரவேண்டும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இப்போது நிறைய தாய்மார்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கர்ப்பிணிகளுக்கு சர்க்கரை நோய் இருந்தாலும், அவர்களுக்கு கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் ஏற்பட்டாலும் போலிக் ஆசிட் பற்றாக்குறை ஏற்படும். தாய்க்கு ஏற்படும் சிலவகை `இன்பெக் ஷன்'களும் போலிக் ஆசிட் பற்றாக்குறையை ஏற்படுத்தும். கிராமப் பகுதி கர்ப்பிணிகள் பெருமளவில் போலிக் ஆசிட் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகிறார்கள்.

தாய் கர்ப்பமான 14-வது வாரத்தில் ஸ்கேன் செய்து பார்த்தால், சிசுவுக்கு மூளை வளர்ச்சி குறைபாடு- முதுகுதண்டுவட பாதிப்பு இருந்தால் தெரிந்துவிடலாம். தாய்மார்கள் போலிக் ஆசிட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து கர்ப்பகாலத்திற்கு முன்பும்- பின்பும் அதில் கவனம் செலுத்தவேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தைகள் அம்மாவை கண்டது அழுகையை நிறுத்துவது ஏன்?குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அம்மாவை பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும். பிறந்து சில மாதங்களில் ஆட்களை
»  முதுகுவலியால் அதிகமாக பாதிக்கப்படும் பெண்கள்
» பட்டாசுப் புகையினால் நுரையீரல் பாதிக்கப்படும்
» பட்டாசுப் புகையினால் நுரையீரல் பாதிக்கப்படும்
» வைட்டமின்-டி குறைவால் சிறுமிகள் பாதிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum