தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூளைச்சாவு: சமூக சேவகரின் உடல் உறுப்புகள் தானம்

Go down

மூளைச்சாவு: சமூக சேவகரின் உடல் உறுப்புகள் தானம் Empty மூளைச்சாவு: சமூக சேவகரின் உடல் உறுப்புகள் தானம்

Post  ishwarya Tue May 07, 2013 12:37 pm

ஆட்டோ மோதி காயம் அடைந்ததில் சமூக சேவகர் கோமா நிலையை அடைந்தார். மூளைச்சாவு அடைந்த அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. புளியந்தோப்பு வஉசி நகரை சேர்ந்தவர் தேவராஜ் (60).

சென்னை ரிசர்வ் வங்கியில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அம்பேத்கர் சமூக சேவை அமைப்பு மூலம் சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வந்தார். தேவராஜ் 2 நாட்களுக்கு முன்பு, புளியந்தோப்பு பின்னி மில் அருகே சாலையை கடக்க முயன்றார். அப் போது வேகமாக வந்த ஆட்டோ அவர் மீது மோதியது.

கீழே விழுந்த அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். நினைவு இழந்த அவரை காவல்துறையினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரது மனைவி இந்திராணியிடம், உங்கள் கணவருக்கு மூளைச்சாவு ஏற் பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, தேவராஜின் கல்லீரல், சிறுநீரகம், இதயம், கண் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்வதற்கான பத்திரத்தில் இந்திராணி கையெழுத் திட்டார்.

அவர் கூறுகையில்,

என் கணவர் பொதுநல சேவை யில் ஆர்வம் கொண்டவர். அவர் உயிருடன் இருந்த போது, எனக்கு ஏதாவது நேர்ந்தால் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறினார். அவரது எண்ணப்படி உறுப்புகளை தானம் செய்தேன் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum