தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வேண்டுதல் உடனே நிறைவேற வேண்டுமா?

Go down

  வேண்டுதல் உடனே நிறைவேற வேண்டுமா?  Empty வேண்டுதல் உடனே நிறைவேற வேண்டுமா?

Post  gandhimathi Wed Jan 23, 2013 1:02 pm




எல்லாம் வல்ல இறைவனுக்கு நம்மால் இயன்றவற்றை பக்தியுடன் அளிப்பதே பூஜை. ஆண்டவனுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனானது அவருக்கு மட்டும் இல்லாமல், அனைத்து ஜீவராசிகளையும் சென்றடைந்து பயன் அளிக்கிறது. நாம் நமது சக்திக்கு ஏற்றவாறு பக்தியுடன் அளிக்கும் அனைத்து பொருட்களையும், இறைவன் அன்புடன் ஏற்கிறார்.

ஆகமங்களில் ஒவ்வொரு தெய்வ வடிவங்களுக்கும் அவர்களுக்கு உரிய சிறப்பான மலர், பழங்கள், மந்திரங்கள், வஸ்திரங்கள், எந்த நாட்களில் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு சில பொருட்கள் அனைத்து தெய்வங்களுக்கும் பொதுவானவையாக உள்ளன. புஷ்பங்களைத் தொடுத்து மாலையாக அணிவிப்பதைப் போல, சில சிறப்பான பழங்களையும் மாலையாகக் கட்டி கடவுளுக்கு அர்ப்பணிப்பதை ஆகமங்கள் ஆமோதிக்கின்றன.

அவற்றில் முக்கியமான ஒன்று தான் எலுமிச்சம்பழம். தீயவற்றைப் போக்கி நன்மையை அளிக்கக்கூடிய கண்கண்ட மருந்து இது. வெற்றியின் அடையாளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் எலுமிச்சம்பழம் கருதப்படுகிறது. காளியம்மன், மாரியம்மன், துர்கா போன்ற வீரத்தை வெளிப்படுத்தி நம்மைக் காக்கும் தெய்வங்களுக்கு இது மிகவும் உகந்தது. எனினும், மற்ற தெய்வங்களுக்கும் இவற்றை மாலையாக அணிவித்து வழிபடலாம்.

இந்த வகையில் எலுமிச்சம்பழத்தை மாலையாகக் கடவுளுக்கு அளிப்பதினால், அந்தப் பழத்தின் சிறந்த மஞ்சள் நிறத்தினாலும் தன்மையாலும் நாம் நமது காரியங்களில் வெற்றியடையலாம். நாமும் தெய்வங்களுக்கு எலுமிச்சம்பழ மாலை அணிவித்து வணங்கினால், நம் வேண்டுதல்கள் எளிதில் நிறைவேறும்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum