தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நவீன சிகிச்சைகளுக்கான அவசியம்

Go down

நவீன சிகிச்சைகளுக்கான அவசியம் Empty நவீன சிகிச்சைகளுக்கான அவசியம்

Post  meenu Wed Jan 23, 2013 12:31 pm

பாரம்பரியக் குறைபாடுகள் வரும் என்பதைத் தெரியாமலோ, அல்லது தவிர்க்க இயலாமலோ திருமணம் செய்து கொண்ட தம்பதியர் கருத்தருக்கும் போது, பிரச்சினைகள் வருவது தவிர்க்க இயலாதது என்பதால் கண்டிப்பாக சிகிச்சை முறைகளை அணுக வேண்டியுள்ளது. சிலருக்கு குழந்தைப்பேறு வாய்க்காத நிலையிலும் இத்தகையச் சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.

மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப ஆண்களின் கருத்தரிப்பிக்கும் ஆற்றலை, ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறை உலக நல மையம் தர நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி ஒரு ஆணின் விந்தில் இருந்து கோடி உயிரணுக்குள் இருந்தாலே கருத்தரிப்பை உண்டாக்க இயலும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆண் வெளிப்படுத்தும் உயிரணுக்களில் சுமார் எழுபது சதவீதத்துக்கும் மேலான உயிரணுக்கள் உயிருடன் இருந்தால் தான் கருத்தரிப்பை உண்டாக்க முடியும். அவற்றுள் ஐம்பது சதவீத அணுக்கள் ஊர்ந்து செல்லக்கூடியவையாகவும், முப்பது சதவீக அணுக்கள் குறைபாடு இல்லாமலும் இருந்தால் கூட போதுமானது.

பரிசோதனையில் சேகரிக்கப்படும் உயிரணுக்களை வைத்து பெண்ணைக் கருத்தரிக்கச் செய்ய வேண்டுமானால், நேரடியாகக் கருப்பைக்குள் விந்தை ஊசி மூலம் செலுத்துவதற்கு பத்து முதல் இருபது லட்சம் உயிரணுக்கள் தேவைப்படும்.

குழந்தை பிறந்து விட்டால் அது வாழ்நாள் முழுவதும் தொடரும் பிரச்சினைதானேப பாரம்பரியக் குறைபாடுகள் என்றால் என்ன? அவை ஏன் வருகின்றன? இவற்றைப் போக்கவே முடியாதா? ஒருவேளை இந்தக் கேள்விகள் அக்குறைபாடுகள் இல்லாதவர்களுக்குப் புதிதாகத் தோன்றலாம். ஆனால், குறைபாடு உள்ளவர்களுக்குத் தெரியும் அல்லவா?

பாரம்பரியக் குறைபாடுகள்.........

மரபு வழியாக பெற்றோருக்கு இருந்தால் பிள்ளைகளும் வரக்கூடிய நோய்களுக்குத்தான் பாரம்பரிய நோய்கள் என்று பெயர். இவை உடலையும் பாதிக்கலாம். மனத்தையும் பாதிக்கலாம். மரபியல் நோய்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன. அவை:-

1. குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பது.
2. மரபணு மாற்றக் குறைபாடுகள் தோன்றுவது.

பெற்றோருக்கு இல்லாமல் அவர்களுடைய ரத்தத் தொடர்புடைய நெருங்கிய உறவினர்கள் யாருக்கேனும் இத்தகையக் குறைபாடுகள் இருந்தாலும், பிறக்கும் குழந்தைக்கு அத்தகைய பாதிப்புகள் வர வாய்ப்புகள் இருக்கின்றன.

இவை தவிர, வேறு பல காரணங்களாலும் கருவிலுள்ள குழந்தையின் மரபியல் பண்புகளில் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ஏற்படும் மின்னல் ஒளியைப் போல தோன்றி, மாற்றத்தை உண்டுபண்ணிவிடக் கூடியவைதான் இந்த மரபியல் பண்புகளில் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ஏற்படும் மின்னல் ஒளியைப் போல தோன்றி, மாற்றத்தை உண்டுபண்ணிவிடக் கூடியவைதான் இந்த மரபியல் குறைபாடுகள். இதன் காரணமாக குழந்தை குறைபாட்டுடன் பிறப்பதுண்டு.

செல்களும், மரபியல் பண்புகளும்........

நமது உடலில் செல்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். பலகோடி செல்கள் சேர்ந்துதான் நமது உடம்பு உருவாகியிருக்கிறதென்பதும் உங்களுக்கும் தெரியும். இந்த செல் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு உட்கரு இருக்கும். இந்த உட்கரு வளர்ச்சியடைந்து பிரிந்துப் பிரிந்து பெருகி பல செல்களாக மாறுவதோடு, அவை பெருகி வளர்ச்சியடையும் தன்மை மற்றும் அமைந்துள்ள இடம் ஆகியவற்றைப் பொறுத்து பல உறுப்புகளாக, முழு உருவமாக பரிணமிக்கிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum