தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வில்வ மரம்

Go down

வில்வ மரம் Empty வில்வ மரம்

Post  gandhimathi Wed Jan 23, 2013 12:25 pm


வானத்தில் வெண்முத்து வடிவில் ஒற்றை நட்சத்திரம் காணப்படும். இதற்கு சித்திரை நட்சத்திரம் என்பார்கள். சித்திரை நட்சத்திரத்துடன் கன்னி ராசி மண்டலமும் புதன் கிரகமும் தொடர்பு கொண்டது. புதன்கிழமை அன்று ஆகஸ்டு 23 முதல் செப்டம்பர் 22-ந் தேதி வரை பிறந்தவர்களுக்கு சித்திரை நட்சத்திரம் ஆட்சி செய்கிறது.

இந்ச நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகள் நன்மைகளும், கெட்ட கதிர்வீச்சுகள் நோய்களையும் மன சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் உண்டாக்குகிறது. இதற்கு சித்திரை நட்சத்திர தோஷம் என்பார்கள். இந்த நோய்களையும் சித்திரை தோஷத்தையும் வில்வ மரம் குணப்படுத்துகிறது. நாம் வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது நம்பிக்கை.

அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும். இந்த மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் எமது சரித்திரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும். சிவனிற்கு பிரியமான வில்வர்ச்சினை மூலம் சிவனின் திருவருட் கடாச்சத்தைப் பெற முடியும்.

வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். வீட்டில் துளசி மாடம் போல் வில்வ மரம் வைத்து வளர்ப்பதற்கு ஒருபோதும் நரகமில்லை. ஒரு வில்வ தளம் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது லட்சம் ஸ்வர்ண புஸ்வங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவையாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன்படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது. இவற்றை வில்வம் மருத்துவ ரீதியில் பயன்மிக்கதாகும். இதனை சிவமூலிகைகளின் சிகரம் எனவும் அழைப்பர்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum