பிரசவத்திற்கு பின்னர் உணவு முறைகள்
Page 1 of 1
பிரசவத்திற்கு பின்னர் உணவு முறைகள்
கர்ப்பமாக இருக்கும் போது உணவில் காட்டும் அக்கறையை குழந்தை பெற்றபின்னர் பெரும்பாலான தாய்மார்கள் காட்டுவதில்லை. அதற்குக் காரணம் அக்கறையின்மை என்பதை விட நேரமின்மை என்றே கூறலாம். குழந்தை பெற்ற பெண்களுக்கு என்னதான் நேரமில்லை என்றாலும் தங்களின் நலனின் கொஞ்சமாவது அக்கறை செலுத்தினால்தான் தொடர்ந்து ஆரோக்கியமாக நடமாடமுடியும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
பிரசவத்தின் போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடுசெய்வதற்கும் தாய்ப்பால் சுரப்பதற்கும் நல்ல சத்தான உணவுகளை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். புரதம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுப் பொருள்களை உண்ண வேண்டும். அது தாய்க்கும் சேய்க்கும் ஆரோக்கியத்தை தரும்.
உடலில் நீர்ச்சத்து குறைந்தால் தாய்ப்பால் சுரப்பதில் சிக்கல் வரும் எனவே அதிகம் தண்ணீர் அருந்துங்கள். அவ்வப்போது வெதுவெதுப்பான நீர் அருந்துவது ஜீரணத்திற்கு நல்லது. வைட்டமின் சத்து நிறைந்த காரட், பீட்ரூட், சேனைக்கிழங்கு போன்ற தாய்க்கு அவசியம். அதேபோல் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
வெந்தயம், வெந்தையக்கீரையை உணவில் எடுத்துக்கொள்ளுங்கள். இது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும். அதேபோல் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவேண்டும். முந்திரி, பாதாம் போன்ற உலர் பருப்புகளை உட்கொள்வது தாய்பால் உற்பத்தியை அதிகரிக்கும். புரதச்சத்து நிறைந்த முட்டை, பீன்ஸ் ஆகியவைகளை தினசரி உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
பெரிய வெள்ளைப்பூண்டு பத்துபல் உரித்து அதை நன்றாக நல்லெண்ணெயில் வதக்கி அத்துடன் நாட்டுவெல்லம் சேர்த்து சாப்பிட பச்சை உடம்புக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். குழந்தைக்குத் தேவையான தாய்ப்பால் கிடைக்கும் பிள்ளைப்பெற்றவர்கள் காரசார உணவை தவிர்த்துவிடுங்கள்.
அதற்குபதிலாக மிளகுத்தூள் போட்டு சமைக்கலாம். ஏனெனில் அதுதான் கருப்பைக்கு ஏற்றது. அதேபோல் காபி,டீ, போன்ற பானங்களை தவிர்த்துவிடுங்கள். அப்பொழுதுதான் பழைய உடம்பை திரும்ப பெறமுடியும்.
பிரசவத்தின் போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடுசெய்வதற்கும் தாய்ப்பால் சுரப்பதற்கும் நல்ல சத்தான உணவுகளை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். புரதம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுப் பொருள்களை உண்ண வேண்டும். அது தாய்க்கும் சேய்க்கும் ஆரோக்கியத்தை தரும்.
உடலில் நீர்ச்சத்து குறைந்தால் தாய்ப்பால் சுரப்பதில் சிக்கல் வரும் எனவே அதிகம் தண்ணீர் அருந்துங்கள். அவ்வப்போது வெதுவெதுப்பான நீர் அருந்துவது ஜீரணத்திற்கு நல்லது. வைட்டமின் சத்து நிறைந்த காரட், பீட்ரூட், சேனைக்கிழங்கு போன்ற தாய்க்கு அவசியம். அதேபோல் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
வெந்தயம், வெந்தையக்கீரையை உணவில் எடுத்துக்கொள்ளுங்கள். இது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும். அதேபோல் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவேண்டும். முந்திரி, பாதாம் போன்ற உலர் பருப்புகளை உட்கொள்வது தாய்பால் உற்பத்தியை அதிகரிக்கும். புரதச்சத்து நிறைந்த முட்டை, பீன்ஸ் ஆகியவைகளை தினசரி உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
பெரிய வெள்ளைப்பூண்டு பத்துபல் உரித்து அதை நன்றாக நல்லெண்ணெயில் வதக்கி அத்துடன் நாட்டுவெல்லம் சேர்த்து சாப்பிட பச்சை உடம்புக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். குழந்தைக்குத் தேவையான தாய்ப்பால் கிடைக்கும் பிள்ளைப்பெற்றவர்கள் காரசார உணவை தவிர்த்துவிடுங்கள்.
அதற்குபதிலாக மிளகுத்தூள் போட்டு சமைக்கலாம். ஏனெனில் அதுதான் கருப்பைக்கு ஏற்றது. அதேபோல் காபி,டீ, போன்ற பானங்களை தவிர்த்துவிடுங்கள். அப்பொழுதுதான் பழைய உடம்பை திரும்ப பெறமுடியும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
![-](https://2img.net/i/empty.gif)
» கர்ப்பக்கால உணவு முறைகள்
» கருச்சிதைவை தவிர்க்கும் உணவு முறைகள்.....
» இளமையை பாதுகாக்கும் உணவு முறைகள்
» டென்ஷனை குறைப்பதற்கான உணவு முறைகள்
» இளமையை பாதுகாக்கும் உணவு முறைகள்
» கருச்சிதைவை தவிர்க்கும் உணவு முறைகள்.....
» இளமையை பாதுகாக்கும் உணவு முறைகள்
» டென்ஷனை குறைப்பதற்கான உணவு முறைகள்
» இளமையை பாதுகாக்கும் உணவு முறைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum