தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சஞ்சய் தத்தின் பொதுமன்னிப்பு விவகாரம்: மகாராஷ்டிரா உள்துறை பரிசீலனைக்கு கவர்னர் பரிந்துரை

Go down

சஞ்சய் தத்தின் பொதுமன்னிப்பு விவகாரம்: மகாராஷ்டிரா உள்துறை பரிசீலனைக்கு கவர்னர் பரிந்துரை Empty சஞ்சய் தத்தின் பொதுமன்னிப்பு விவகாரம்: மகாராஷ்டிரா உள்துறை பரிசீலனைக்கு கவர்னர் பரிந்துரை

Post  ishwarya Sat May 04, 2013 6:19 pm

1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் முறைகேடாக ஏ.கே-56 ரக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு தடா கோர்ட்டு 6 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்தது.

இதையடுத்து அவர் ஒன்றரை ஆண்டு ஜெயில் இருந்தார். தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் அவருக்கு வழங்கிய தண்டனையை 5 ஆண்டாக குறைத்தது.

அவருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் அவர் தீவிரவாதியில்லை என்று நீதிமன்றங்கள் கூறியுள்ளதால், காந்திய வழியை பின்பற்றும் சஞ்சய் தத்துக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என்று எம்.பி. ஜெயப்பிரதாவும், முன்னாள் சமாஜ்வாடி கட்சித்தலைவரும் அமர்ஜிங்கும் மகாராஷ்டிரா கவர்னர் சங்கரநாராயணனிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை, கவர்னர் உள்துறையின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக கவர்னர் மாளிகை செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். முன்னதாக இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜும் சஞ்சய் தத்துக்கு பொதுமன்னிப்பு வழங்க மகாராஷ்டிரா கவர்னருக்கு கடிதம் மூலம் கோரியுள்ளார். மேலும் வெளிநாடுகளில் இருந்தும் பல கோரிக்கைகள் வந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum