தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐதராபாத் போலீசில் நடிகை அஞ்சலி இன்று சரண்?: சென்னை கோர்ட்டிலும் ஆஜராகிறார்

Go down

ஐதராபாத் போலீசில் நடிகை அஞ்சலி இன்று சரண்?: சென்னை கோர்ட்டிலும் ஆஜராகிறார் Empty ஐதராபாத் போலீசில் நடிகை அஞ்சலி இன்று சரண்?: சென்னை கோர்ட்டிலும் ஆஜராகிறார்

Post  ishwarya Sat May 04, 2013 5:07 pm

நடிகை அஞ்சலி கடந்த 9-ந்தேதி ஐதராபாத் ஓட்டலில் இருந்து மாயமானார். அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் ஆகியோர் சித்ரவதை செய்ததாக புகார் கூறினார். சித்தப்பா ஓட்டலில் அடித்ததாகவும் கூறியுள்ளார். அஞ்சலி மீது அவரது சித்தி பாரதிதேவியும், டைரக்டர் களஞ்சியமும் சென்னை போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அஞ்சலியை கண்டு பிடிக்கும் படி சென்னை ஐகோர்ட்டிலும் கேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அஞ்சலி காணாமல் போய்விட்டதாக அவரது சகோதரர் ஐதராபாத் போலீசில் புகார் செய்துள்ளார். இதையடுத்து அஞ்சலியை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக அவர் தலைமறைவாக இருப்பதாகவும் இன்று மாலை அல்லது நாளை போலீசில் சரண் அடைவார் என்று எதிர்பார்ப்பதாகவும் ஆந்திர போலீஸ் டி.ஜி.பி. சுதிர்பாபு தெரிவித்தார்.

சித்தி பாரதிதேவி சித்தப்பா சூரியபாபு, டைரக்டர் களஞ்சியம் ஆகிய மூவர் மீதும் அஞ்சலி குற்றம் சாட்டி உள்ளதால் அவர்களிடம் போலீஸ் விசாரணை நடத்தும் என தெரிகிறது. ஓட்டலில் இருந்து அஞ்சலி காணாமல் போனதும் உடன் தங்கி இருந்த சித்தப்பா சூரியபாபு போலீசில் புகார் செய்யாமல் சென்னை கிளம்பி சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

எனவே அவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுகிறார். தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் ஒருவரிடம் அஞ்சலி அடைக்கலமாகி இருப்பதாக கூறப்படுகிறது. அஞ்சலி ஓடியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தமிழ் படங்களில் மட்டுமே அவர் நடிக்க வேண்டும் என்பது சித்தி, சித்தப்பா வற்புறுத்தலாக இருந்துள்ளது. ஆனால் தெலுங்கு படங்களில் நடிக்க தமிழை விட அதிக சம்பளம் கிடைக்கிறது. எனவே ஆந்திரா போய் விடலாம் என்று அஞ்சலி வற்புறுத்தியுள்ளார். இதுவே அவர்களுக்குள் ஏற்பட்ட முதல் கருத்து வேறுபாடு.

அஞ்சலி நடித்த சேட்டை படம் தெலுங்கில் `ரீமேக்' ஆக உள்ளது. தெலுங்கிலும் அஞ்சலியே நடிக்க விரும்பி அதற்காக சம்பளத்தை அவரே பேசி முடித்தாராம். இதுவும் தகராறுக்கு இன்னொரு காரணம். எனவே சித்தி பிடியில் இருந்து விலகி சுதந்திரமாக செயல்பட அஞ்சலி முடிவு செய்தார். அதற்கு ஐதராபாத் பயணத்தை பயன்படுத்திக் கொண்டார்.

தெலுங்கில் வளரும் இளம் நடிகர் ஒருவரிடம் தனது கஷ்டங்கள் பற்றி பேசி உள்ளார். அவர்தான் தெலுங்கில் பிரபலமான தயாரிப்பாளர் ஒருவர் பெயரைச் சொல்லி அவரிடம் போனால் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார் என்று ஆலோசனை சொன்னாராம். தற்போது அந்த தயாரிப்பாளர் பாதுகாப்பில்தான் இருக்கிறார். அஞ்சலி அண்ணன் ரவிசங்கர் போலீசில் புகார் அளித்துள்ளதால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

எனவே ஐதராபாத் போலீசில் ஆஜராக முடிவு செய்துள்ளார். அதன் பிறகு சென்னை ஐகோர்ட்டில் ஆஜராக உள்ளார். சென்னையில் உள்ள டாக்டர் ஒருவருடன் அஞ்சலி அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அஞ்சலி மாயமானதும் 18 தடவை வெளியே பேசி உள்ளார். அதில் அதிகமாக பேசி இருப்பது இந்த டாக்டருக்குதான். டாக்டர் தங்கள் குடும்பத்துக்கு நெருக்கமானவர் தான் என்று சித்தி பாரதிதேவி கூறியுள்ளார். மருத்துவம் தொடர்பான தொடர்பா வேறு மாதிரி தொடர்பு என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum