தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஞ்சலி புகார் விவகாரத்தில் அரசியல் சதி: டைரக்டர் களஞ்சியம்

Go down

அஞ்சலி புகார் விவகாரத்தில் அரசியல் சதி: டைரக்டர் களஞ்சியம் Empty அஞ்சலி புகார் விவகாரத்தில் அரசியல் சதி: டைரக்டர் களஞ்சியம்

Post  ishwarya Sat May 04, 2013 4:46 pm

நடிகை அஞ்சலி கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். அவரை காணவில்லை என ஐதராபாத் போலீசில் அவரது சகோதரர் ரவிசங்கர் புகார் செய்தார். அதன் பேரில் ஐதராபாத் போலீசார் அஞ்சலியை தேடத் தொடங்கினர்.

இதனால் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத் போலீசில் நடிகை அஞ்சலி ஆஜராகி தான் மாயமானது குறித்து விளக்கம் அளித்தார். மன அழுத்தம் காரணமாக ஓய்வு எடுப்பதற்காக தலைமறைவாக இருந்ததாகவும், தன்னை யாரும் கடத்தவில்லை எனவும் கூறினார்.

அஞ்சலி மாயமானதற்கு முன்னதாக அவரது சித்தி பார்வதி தேவி பற்றியும், டைரக்டர் களஞ்சியம் பற்றியும் பரபரப்பு புகார்களை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். சித்தியும், டைரக்டர் களஞ்சியமும் சேர்ந்து தங்களது கட்டுப்பாட்டில் என்னை வைத்துகொள்ள நினைக்கிறார்கள், எனது சொத்துக்களையும் அபகரித்து விட்டனர், அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த டைரக்டர் களஞ்சியம் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் அஞ்சலி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். மேலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் செய்தார்.

இந்தநிலையில் நாகர்கோவிலில் இன்று மாலை நடைபெறும் தமிழர் நலம் பேரியக்கத்தின் சார்பில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த டைரக்டர் களஞ்சியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நடிகை அஞ்சலி பிரச்சினையை பொருத்தமட்டில் குடும்ப பிரச்சினை காரணமாக அவர் வீட்டை விட்டு ஓடிச்சென்று தனது சித்தி, சித்தப்பா மீது புகார் தெரிவித்துள்ளார். என் மீது அவர் சுமத்தியுள்ள புகார் வியப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துகிறது.

நான் அஞ்சலியை கொடுமை செய்ததாகவும், சொத்தை அபகரிக்க முயல்வதாகவும், கொலை செய்ய முயற்சிப்பதாகவும் 3 குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது சந்தேகமாக உள்ளது. இதுதொடர்பாக நான் போலீசில் புகார் செய்துள்ளேன்.

அஞ்சலியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி எனக்கு நீதி வழங்க வேண்டும். இதுதொடர்பாக கோர்ட்டில் அவர் மீது அவதூறு வழக்கும் தொடர்ந்து உள்ளேன். நீதிமன்றத்திலும் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக என்னுடைய தமிழர் நலம் பேரியக்க அமைப்பு பாடுபட்டு வருகிறது. அந்த அமைப்பின் மாநில தலைவராக நான் உள்ளேன். இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க. மீதும், காங்கிரஸ் அரசு மீதும் நாங்கள் குற்றம் சாட்டி வருகிறோம். இதனால் அஞ்சலி விவகாரத்தில் அரசியல் சதி இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.

அஞ்சலி அபாண்டமாக என் மீது பழி சுமத்தி விட்டார், சேற்றை என் மீது மட்டுமின்றி எனது அமைப்பினர் மீதும் வீசி உள்ளார். தற்போது ‘ஊர் சுற்றும் புராணம்’ படத்தில் நான் கதாநாயகனாகவும், அஞ்சலி கதாநாயகியாகவும் நடித்து வருகிறோம். இதற்கான படப்பிடிப்பு ஏற்கனவே 15 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. சம்பவத்துக்கு முந்தைய நாளில்கூட என்னுடன் அஞ்சலி பணி செய்துள்ளார்.

இந்த படத்துக்கான அடுத்த கால்ஷீட்டை அஞ்சலி வருகிற 24-ந் தேதி கொடுத்துள்ளார். அன்றைய தினம் அவர் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும். இல்லாவிட்டால் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், நடிகர் சங்கத்தில் அவர் மீது புகார் செய்வேன். பிரச்சினைக்கு பிறகு அஞ்சலி என்னுடன் பேசவில்லை. 24-ந் தேதி படப்பிடிப்புக்கு அவர் வந்தால் வழக்கம்போல் நான் அவருடன் நடிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகை அஞ்சலி மீது டைரக்டர் களஞ்சியம் போலீஸ் கமிஷனரிடம் புகார்
» நடிகை அஞ்சலி மீது நடிகர் சங்கத்தில் புகார்: டைரக்டர் களஞ்சியம் பேட்டி
» நடிகை அஞ்சலி மீது அவதூறு வழக்கு: டைரக்டர் களஞ்சியம் கோர்ட்டில் ஆஜர்
» டைரக்டர் மட்டும் இல்லேன்னா… ‘-அதிர்ச்சியில் அஞ்சலி!
» மோசடி புகார்: டைரக்டர் கவுதம்மேனனை கைது செய்ய கோர்ட்டு தடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum